Type Here to Get Search Results !

கிறிஸ்தவ கவிதைகள் | Daily Quotes | அற்புதம் | Jesus Sam

==============
Quotes
படித்ததில் பிடித்தது
===============

நமக்கு ரொம்ப Simple-லான

அமைதியான

ரொம்ப யதார்த்தமான

வாழ்க்கையைதான்

இயேசு நாதர் தந்துருக்காரு...




நாமதான் தேவையில்லாம

நம்மல சுத்தியிருக்குற பல

கிய்யாங்-முய்யாங் அலப்பறை ஆளுங்களின்

வாழ்க்கை முறையோடு

நம்ம வாழ்க்கையை

கம்பேர் பண்ணிகிட்டு,




கிருக்குத்தனமா கிருபைக்கு

வெளில போய் நின்னுகிட்டு

செத்துப்போன தத்துவங்களை

பேசி புலம்பிகிட்டு இருக்கோம் 😊




ரொம்ப எழுதி உங்களை

குழப்பாம சுருக்கமா

ஒரு விசயத்த சொல்றேங்க...




1) கண்ணை மூடுங்க




2) நெஞ்சுல கைய வைங்க




3) மூச்சை ஆழமா இழுத்து

மெதுவா வெளிய விடுங்க




4) சில வினாடிகள்

மனச அமைதியா வைங்க




5) மனதின் ஆழத்திலிருந்து

கர்த்தர் செய்த சகல

உபகாரங்களையும்

நினைத்துப்பாருங்க




6) மறுமடியும் கொஞ்ச நேரம்

மனச ஆழ்ந்த அமைதலுக்குள்

கொண்டு போங்க




7) இப்ப பாருங்க உங்க கண்களில்

கண்களில் கண்ணீர் தானாய்

வழிந்தோடும்

உள்ளத்திலிருந்து ஸ்தோத்திரங்கள்

ஊற்றாய் புரண்டோடும் 🥰❤️🙏🔥




ஆமாங்க.....

பொய்யான மாயையைப்

பற்றிக்கொள்ளுகிறவர்கள்

தங்களுக்கு வரும்

கிருபையைப்

போக்கடிக்கிறார்கள்.

(யோனா 2:8)




அதனாலதான் இந்த

👇வசனத்த திரும்பவும் ஞாபகப்படுத்துகிறேன்.




கர்த்தருக்குள் எப்பொழுதும்

சந்தோஷமாயிருங்கள்;

சந்தோஷமாயிருங்கள் என்று

மறுபடியும் சொல்லுகிறேன்.

(பிலி 4:4)




Stay Blessed and Happy-ங்க.....

To Get Daily Quotes Contact +917904957814



======
Quotes
=======
அற்புதம் என்பது

நம் தேவைக்காக அல்ல

தேவனுடைய தேவைக்காக.




நாம் வேண்டிக்கொள்ளலாம்

தவறில்லை




ஆனால் அவரது வேளையில்தான்

அதை அவர் செய்வார்




நமக்கு பொழுதுபோக்க அல்ல

ஆத்துமாக்களின் பழுதுநீக்கவே

அற்புதங்களும் அடையாளமும்




நாம் சொன்னதையெல்லாம் செய்ய

அவர் ஒன்றும் நம் வேலைக்காரன் அல்ல




அவர் நம் பரம எஜமானன்




நம் சித்தத்தை

அவர் காலடியில் சமர்ப்பித்து

அவர் சித்தத்துக்காக காத்திருந்தால்

மாபெரும் அற்புதம் செய்வார்

மகிமையாய் உயர்ந்துநிற்பார்




அப்போது

உண்மையான மகிழ்ச்சி

கரைபுரண்டோடும்

நம் இல்லத்திலும்

தேசத்திலும்.




By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact +917904957814




======
Quotes
======
நூலகத்துக்குள்

புத்தகங்கள் உண்டு




ஆனால்

ஒரு புத்தகத்துக்குள்

ஒரு நூலகமே உள்ளது




அதுதான்

பரிசுத்த வேதாகமம்




இந்த நூலகம்



உண்மையுள்ளது

உயிரடைய வைப்பது




ஜீவனுடையது

ஜீவ பாதையில் நடத்துவது




இந்த உன்னத நூலத்தில்

நீங்களும் உறுப்பினராகிவிடுங்கள்




ஆயுள் சந்தா

பணம் அல்ல

உங்கள் இருதயம் மட்டுமே.




By Bro Durai Dainel
To Get Daily Quotes Contact+917904957814




====
Quotes
=====
ஒரு தடவை மட்டும்

வாசிக்க வேண்டிய நூல்கள்

கோடிக்கணக்கில் இருக்கின்றன.




இரு தடவை

வாசிக்க வேண்டிய நூல்கள்

இலட்சக்கணக்கில் இருக்கின்றன.




ஆனால்

வாழ்க்கை முழுவதும்

வாசித்துக்கொண்டே இருக்கவேண்டிய நூல்

ஒன்றே ஒன்று மட்டும்தான் இருக்கிறது.




ஆம்

பரிசுத்த வேதாகமம் தான் அது.




அது

தேவ வார்த்தை




தேவனே அந்த வார்த்தை.

To Get Daily Quotes Contact +917904957814

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.