Type Here to Get Search Results !

2 Chronicles 6-8 Bible Study | 2 நாளாகமம் 6-8 வேத ஆராய்ச்சிக் கட்டுரை | Jesus Sam

2 CHRONICLES : 06 - 08*
(2நாளாகமம் : 6-8)

💐💐💐💐💐💐💐

சாலொமோன் கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டி முடித்த பின்னர் ஒரு வெண்கலப் பிரசங்க பீடத்தை உண்டாக்கி அதன் மேல் நின்று இஸ்ரவேல் சபையாருக்கு எதிராக *முழங்காற்படியிட்டு* தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து கர்த்தரிடம் விண்ணப்பம் ஏறெடுத்தார் என்று வாசிக்கிறோம்.

(2 நாளாகமம்: 6:13)

★முழங்காற்படியிடுதல் தாழ்மையைக் குறிக்கிறது.

சாலொமோன் யாவருக்கும் முன்பாக முழங்காற்படியிட்டது கர்த்தருக்கு முன்பாக அவருடைய தாழ்மையைக் காண்பிப்பதோடு நமக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

★ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் முழங்காற்படியிட்டு ஜெபித்ததை லூக்கா 22: 41-42 ல் காண்கிறோம்.

★சாலொமோன் தன் *கரங்களை வானத்திற்கு நேராக விரித்து* கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினார் என வாசிக்கிறோம்.

★கைகளை விரித்து ஜெபிப்பது என்பது நம் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக விரிவாய் திறப்பதற்கு அடையாளமாகும்.

★பரலோகத்தில் வீற்றிருக்கும் உன்னதமானவருக்கு நேராக *கரங்களை விரித்து ஜெபிப்பது கர்த்தருடைய கிருபைகளையும் இரக்கங்களையும் பெற்றுக்கொள்வதற்கான ஆயத்தநிலை*.

★எந்த நிலையிலும் நாமும் கர்த்தருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, கர்த்தரின் கிருபைகளையும் இரக்கங்களையும் பெறவேண்டும் என்ற ஆயத்தத்துடன் ஜெபிக்கும் வழக்கத்தை வைத்துக் கொள்வோமாக.

*ஆமென்*

💐💐💐💐💐💐

✍️ Bhavani Jeeja Devaraj, Nagercoil

Admin:Group No. 2068

[22/08, 07:43] (W) Arun Selva Kumar: 🌈 *On our knees is a fitting posture for a creature in the presence of his Creator.*




⛹️‍♂️ *Application* : II Chr. 6:12-15- *If we are wondering about the proper posture for prayer, Solomon kneeled down. On your knees is a fitting posture for a creature in the presence of his Creator.* Solomon begins with thanksgiving.




⛹️‍♂️ *Application* : II Chr. 7:2-3- *This is an expression that should get into our vocabulary, and that we should say from time to time, “The LORD is good; His mercy endureth forever.”* The psalmist said, “The LORD is good. Let the redeemed of the LORD say so.” If we are not “say-so Christians,” nobody else will be. The Lord is good. Let the redeemed of the Lord say so.




💡II Chr. 6:5-6-God has His will for each one of us. His will for us involves everything in our life. The great problem for us is to get in the will of God. *We can stand off and argue all we want to about the free will of man and God’s sovereignty, but it is a fruitless waste of time. Here is something that is very profitable: it is to get to the place—in fact, on the spot that God has marked “X”—which He has chosen for you and for me.* When you and I get on that spot, we will be in the right place. God’s will is the important thing. God chose Jerusalem; God chose this man David.




💡II Chr. 6:18- *This is an important verse, to which teaches once again that certainly neither Solomon nor the nation Israel had any notion of “boxing God in” when they built a temple for Him.* Rather the temple was to be a meeting place between God and man.




💡II Chr. 7:1- God does not accept the temple because it is beautiful—and it is that. He does not accept it because of the lavish expenditure of wealth. *The basis of His acceptance is the fact that it is pointing to Christ. It is His sacrifice, actually, that makes this acceptable to God.*




Jaya Pradeep-Kodaikanal.

[22/08, 07:43] (W) Arun Selva Kumar: 365 DAYS BRP DAY 1️⃣3️⃣0️⃣

2 Chron 6-8

*WHAT A GOD WE SERVE* ❗️




*Walk before Me* ‼️




💥 Walk before Me as your father David walked (2 Chron 7:17)




💥 Walk before Me and be blameless (Gen 17:1)




💥 Walk before Me in truth with all your heart and with all your soul (1 Kings 2:4)




💥 Walk before Me in truth, in righteousness, and in uprightness of heart (1 Kings 3:6)




💥 Walk before Me in integrity of heart and in uprightness (1Kings 9:4)




💥 Walk before Me forever (1 Sam 2:30)




The Lord said *“I am Almighty God; walk before Me and be blameless"*




Usha

[22/08, 07:43] (W) Arun Selva Kumar: *22.08.2023*




⚡ *தேவன் ஜெபங்களைக் கேட்கிறார்* ⚡




☄️ *"இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்."* (2 நாளாகமம் 7:15).




🔸 சாலொமோனால் கட்டப்பட்ட ஆலயத்தில் தேவன் தம்முடைய மகிமையான பிரசன்னத்தை வெளிப்படுத்தினார். எனவே, அங்கு செய்யப்படும் ஜெபங்களுக்கு *அதிக முக்கியத்துவம்* கொடுப்பதாக அவர் வாக்களித்தார்.




🔸 இயேசு தம்மைத் தாழ்த்தி தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தார். அவருடைய கீழ்ப்படிதல் அவருக்கு சிலுவை மரணத்தைக் கொண்டுவந்தபோதிலும் கீழ்ப்படிந்தார். எனவே, இயேசுவின் நாமம் எல்லாப் நாமத்துக்கும் மேலாக உயர்த்தப்பட்டது. இயேசுவை மகிமைப்படுத்துவது தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருகிறது. பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துகிறார்: *"ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்."* (பிலிப்பியர் 2:9-11). *சாலொமோனால் கட்டப்பட்ட ஆலயத்தில் செய்யப்படும் ஜெபங்களை விட இயேசுவின் நாமத்தில் செய்யப்படும் ஜெபங்கள் அதிக வல்லமை வாய்ந்தவை.* ஏனென்றால் இயேசுவின் நாமம் எல்லா நாமத்திற்கும் மேலானது.




🔸 பாவிகளின் ஜெபத்தை தேவன் கேட்கமாட்டார். தேவன் பாவத்துடன் சமரசம் செய்வதில்லை. எனவே, நாம் *பாவஅறிக்கை செய்து அவருடன் ஒப்புரவாகி* பின்பு நம்முடைய ஜெபங்களை ஏறெடுக்க வேண்டும். *"கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது."* (1 பேதுரு 3:12).




🔸 விசுவாசம் இல்லாமல், நாம் தேவனைப் பிரியப்படுத்த முடியாது, நம்முடைய ஜெபங்களுக்கு அவர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. *"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்."* (எபிரெயர் 11:6) என்று வேதம் கூறுகிறது. *"ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்."* (மாற்கு 11:24) என்று இயேசு அறிவித்தார்.




🔸 அவருடைய சித்தத்தின்படி நாம் கேட்டால், தேவன் நமக்குச் செவிசாய்த்து, நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார். *“நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.”* (1 யோவான் 5:14) என்று வேதம் போதிக்கிறது.




🔹 *இயேசுவின் நாமத்தில் செய்யப்படும் நமது ஜெபங்கள் கேட்கப்பட்டு பதிலளிக்கப்படுகின்றன என்று நாம் சாட்சி கூறுகிறோமா?*

🔹 *நாம் தேவனுடைய சந்நிதிக்குச் செல்லும்போதெல்லாம், நம்முடைய ஜெபங்கள் கேட்கப்பட வேண்டும் என்பதற்காக, நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, தேவனோடு ஒப்புரவாகிறோமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *சாலொமோனால் கட்டப்பட்ட ஆலயத்தில் செய்யப்படும் ஜெபங்களை விட இயேசுவின் நாமத்தில் செய்யப்படும் ஜெபங்கள் அதிக வல்லமை வாய்ந்தவை.*

2️⃣ *விசுவாசம் இல்லாமல், நாம் தேவனைப் பிரியப்படுத்த முடியாது, நம்முடைய ஜெபங்களுக்கு அவர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.*

3️⃣ *கர்த்தருடைய முகம் தீமை செய்கிறவர்களுக்கு விரோதமாயிருக்கிறது, அவர்களுடைய ஜெபங்கள் கேட்கப்படுவதில்லை.*

4️⃣ *நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், தேவன் நமக்குச் செவிகொடுக்கிறார்.*




Dr. எஸ். செல்வன்

சென்னை

[22/08, 07:43] (W) Arun Selva Kumar: *தேசத்திற்கு ஷேமம்*

~~~~~~~~~~~~~~~




2 நாளாகமம் 7: 13, 14.




1. சாலொமோன் கர்த்தருக்கு ஆலயத்தை கட்டி, பிரதிஷ்டை பண்ணி, பலி செலுத்திய போது, *இரவிலே கர்த்தர் சாலொமோனுக்கு தரிசனமாகி,* ஒரு இரகசியத்தை கூறுகிறார். அது என்ன?




1. *கர்த்தர் மழையில்லாதபடி வானத்தை அடைக்கிறார்*




2. *தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்கு கட்டளையிடுகிறார்.*




3. *ஜனங்களுக்குள் கொள்ளை நோயை அனுப்புகிறார்.*




2. ஆம், இன்று உலகத்தின் பல பாகங்களிலும் மழையில்லை. வறட்சி, பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. சில இடங்களில் பெருமழையினால் சேதமும் ஏற்படுகிறது. எப்படியாயினும் *கர்த்தரே வானத்தை அடைக்கிறார். திறக்கிறார். சில நாடுகளில் வெட்டுகிளிகளால் பயிர் சேதம் உண்டாயின. மட்டுமல்ல, கொரோனா கொள்ளை நோயை கர்த்தர் அனுப்புகிறார்*. எவ்வளவு மரணங்கள் ! நஷ்டங்கள்! பஞ்சங்கள்! ஆம், முதலில் நாம் சந்தித்த கொரோனாவை விட, மிக பெரிய, கொள்ளை நோய் ஆரம்பிக்க போகிறது என உலக சுகாதார நாடுகள் நம்மை எச்சரிக்கிறது. *அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன?*




3. *என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள்*, அதாவது கிறிஸ்துவின் நாமம் தரிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டியவற்றை கர்த்தர் இங்கு கூறுகிறார்.




1. *தங்களை தாழ்த்த வேண்டும்*. கிறிஸ்து சிலுவையின் மரண பரியந்தம் தன்னை தாழ்த்தினார் அல்லவா? நாம் நம்மை எவ்வளவு தாழ்த்துகிறோம்? அப்படியானால் பெருமை, மேட்டிமை, நான் என்கிற எண்ணம், அகங்காரம் ஆகிய குணங்கள் நம்மில் இருக்க கூடாது. நாம் நிற்பதும், நிர்மூலம் ஆகாததும் அவர் கிருபையே




2 . *ஜெபம் பண்ண வேண்டும்.* 1 மணி நேரம் கூட சீஷர்களால் ஜெபிக்க முடியவில்லை அல்லவா ? நம்முடைய சுய பெலனால் ஜெபிக்க முடியாது. ஆகவே ஜெப ஆவியை, ஜெப வரத்தை நாம் ஜெபித்து, கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.



3 . *அவர் முகத்தை தேட வேண்டும்*. ஆம், அவருடைய முகத்தின் பிரகாசம் நம் முகத்தையும் பிரகாசிக்க பண்ணும். அவர் முகத்தை தேடினவர்கள் ஓருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை.




4. *தங்கள் பொல்லாத வழிகளை விட்டு திரும்ப வேண்டும்.* ஆம், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, மனம் திரும்ப வேண்டும்.




ஆம், இந்த நாட்களில் கூட நாமும் இவைகளை செய்ய மறவாதிருப்போம்.




4. *அப்பொழுது பரலோகத்திலிருக்கிற தேவன் ஜெபத்தை கேட்பார்*




*அவர்கள் பாவத்தை மன்னிப்பார்.*




*தேசத்திற்கு ஷேமத்தை கொடுப்பார்.*




ஆம், இன்று நம் தேசத்தில் மழை இல்லையா? வறட்சியா? வெட்டுகிளியா? பஞ்சமா? கொள்ளை நோயா? நம் தேசத்தில், வாழ்க்கையில் ஷேமம் உண்டாக கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.




*Dr.Padmini Seĺvyn*


[22/08, 07:43] (W) Arun Selva Kumar: 2. நாளாகமம்.8.

☘️☘️☘️☘️☘️☘️

"சாலொமோன் சாதனைகள்"

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

.சாலொமோன் கோவிலைக் கட்ட ஏழு வருடங்களும், அவருடைய அரண்மனையைக் கட்ட 13 வருடங்களும் எடுத்தது.

இந்த இருபது வருடங்களின் முடிவில் அவருடைய ராஜ்யம் பாதுகாப்பாகவும், நிலையானதாகவும், ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் இருந்தது.

இது சாலமோனின் சிறந்த இதயத்தையும், ஒரு கட்டிடக் கலைஞராக இருந்த லட்சியத்தையும் பிரதிபலிக்கிறது.

அவர் ஆற்றலுடன் புதிய நகரங்களைக் குடியமர்த்தினார் மற்றும் சேமிப்பு , நகரங்கள், கோட்டைகள், தேர் நகரங்கள் மற்றும் குதிரைப்படை நகரங்களை கட்டினார்.

விவேகமற்ற திருமணங்கள் சாலொமோனின் ஆன்மீக வீழ்ச்சியைத் தொடங்கின.

அவருடைய மனைவி அவிசுவாசியாகவும் பரிசுத்தமில்லாதவளாகவும் இருந்தாள்.

சாலொமோன் இஸ்ரவேல் மக்களை தைரியமாக புதிய முயற்சிகளுக்கு அழைத்துச் சென்றார்.

சாலமோனின் எல்லா வேலைகளும் ஒழுங்காக இருந்தன.

இது அவரது சிறந்த ஞானத்தின் பிரதிபலிப்பாகவும், இஸ்ரவேல் ராஜ்யத்தை வழிநடத்த உதவிக்காக அவர் செய்த ஜெபத்திற்கான பதிலாகவும் இருந்தது.

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

மேபி சுந்தர். சென்னை. இந்தியா. குழு எண்.2196

[22/08, 07:43] (W) Arun Selva Kumar: *🌈GOD’S COVENANTAL PROMISE🌈*




DAY - 2 Chronicles chapters 6-8




☄️Solomon's prayer of dedication of the temple and God's second appearance to him, is described in 2 Chronicles chapters 6-8.




1️⃣ *SOLOMON’S PRAYER OF DEDICATION OF THE TEMPLE*




🔹After meticulous planning and construction, Solomon completed the magnificent temple in Jerusalem, fulfilling King David's dream.

🔹Solomon summoned the Israelites, uniting the entire congregation to witness the consecration and dedication of the temple. with music and praise to God and the Glory of God filled the temple!

🔹Before his prayer, Solomon addressed the assembly, recounting God's faithfulness and the fulfillment of His promises.




2️⃣ *SOLOMON’S PRAYER OF DEDICATION*




🔸Solomon acknowledged God's surpassing greatness, emphasizing that even the grandeur of the temple could not contain Him.

🔸Solomon implored God to dwell in the temple, to listen to the prayers of His people, and to forgive their sins when they repented.

🔸Solomon prayed for God's continued blessings upon the nation, seeking divine guidance and protection for future generations.




3️⃣ *GOD’S SECOND APPEARANCE TO SOLOMON*




🔺Following Solomon's prayer, God appeared to him a second time, affirming His approval of the temple and its purpose.

🔺God assured Solomon that He had heard his prayer, chosen the temple as a dwelling place, and promised to watch over it perpetually.

🔺God reminded Solomon of the importance of obedience, promising blessings and prosperity if both he and the nation remained faithful.

🔺Believers are encouraged to approach God with reverence, acknowledging His supremacy in their prayers.

🔺It is important for us to gather together as believers to seek God's presence and blessings.

🔺God's second appearance to Solomon reinforces His Covenantal promise and His faithfulness in keeping His promises.




♥️ *LIFE LESSONS*




💥Solomon's prayer of dedication highlights the importance of humility, reverence, and trust in God's faithfulness.

💥These events remind believers that God's presence is not confined to physical structures but can be experienced wherever believers gather in unity.

💥They reassure believers of God's unwavering commitment to His promises.




*‼️LET US APPROACH GOD WITH HUMBLE HEARTS TRUSTING IN HIS STEADFAST FAITHFULNESS‼️*




Princess Hudson

[22/08, 07:43] (W) Arun Selva Kumar: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖




📗 *சிறிய குறிப்பு* 📗




🍂 *தனி வீடு* 🍂




பார்வோனின் மகள் சாலொமோனின் முதல் மனைவி. அது *அரசியல் கூட்டணிக்கான திருமணம்.* அவள் எருசலேமில் வசிக்க வந்தாள். இந்த நேரத்தில் *சாலொமோனின் இருதயம் தேவனாகிய கர்த்தருக்கு மிகவும் நெருக்கமாக* இருந்தது.




*அவனது தகப்பன் தாவீதின் வீட்டில் வசிக்கும் யூதரல்லாத மனைவி அவனை கவலையடையச் செய்தாள்*. மேலும் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி சிறிது காலம் அங்கே இருந்தது. *அவனது எகிப்திய மனைவியாலும், அவளுடைய எகிப்திய பழக்கங்களாலும் அந்த இடம் தீட்டுப்படுவதை அவன் விரும்பவில்லை.*




திட்டமிட்டு அவளுக்கு தனி வீடு கட்டினான். *சரியான நேரத்தில் சாலொமோன் தன் மனைவியான பார்வோனின் மகளை* அவளது எகிப்திய உதவியாளர்களுடன் அந்த வீட்டிற்கு மாற்றினான் (2 நாளா 8:11). நாம் *ஆண்டவருக்கு நெருக்கமாக இருக்கும் வரை, நம் மனசாட்சி கூர்மையாகவும்* தெளிவாகவும் இருக்கும்.




*சிறிய தவறு கூட நம்மை கலங்க வைக்கிறது*. மேலும் அதை சீக்கிரம் சரிசெய்ய முயற்சிக்கிறோம். எனவே நாம் *எப்பொழுதும் பரிசுத்த ஆவியானவரின் மென்மையான வழிநடத்துதலுடன் இணைந்திருப்பது மிகவும் முக்கியம்.*




_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼

_ஆகஸ்ட் 22, 2023_

[22/08, 07:43] (W) Arun Selva Kumar: Day 130 2Chron 7:14




*Any my people who are called by My name ,humble themselves and pray and seek my face and turn from their wicked ways then I will hear from heaven and forgive their sin and heal their land*




Joshua had predicted God' s people would wander away from the lord Jos 24:14_27. But God gives us a way back.




In humility pray on behalf of our nation ,identifying its sins and confessing them .




Seek God's face and pray that anyone who may be doing evil in your nation will turn from their wicked ways God has promised forgiveness and healing to those nations that come to Him in humility and repentance




*God wants us to repent or turn away from sin.He promises to hear us to forgive us _ heals us*




Cynthia Sathiaraj

Chennai
















[22/08, 04:43] +91 99431 72360: ✝️🛐📖🌅🙏🙇‍♂️🙇‍♀️✝️

*365 நாட்களில் வேதவாசிப்பு*




*நாள்: 130* *22/08/2023*

*செவ்வாய்க்கிழமை*




*2நாளாகமம் 6 - 8*



*ஜெபிக்க,படிக்க,*

*தியானிக்க,பகிர*.

✝️🛐🙇‍♀️📖🙇‍♂️🌍🛐✝️.

[22/08, 04:43] +91 99431 72360: *22.08.2023*




⚡ *தேவன் ஜெபங்களைக் கேட்கிறார்* ⚡




☄️ *"இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்."* (2 நாளாகமம் 7:15).




🔸 சாலொமோனால் கட்டப்பட்ட ஆலயத்தில் தேவன் தம்முடைய மகிமையான பிரசன்னத்தை வெளிப்படுத்தினார். எனவே, அங்கு செய்யப்படும் ஜெபங்களுக்கு *அதிக முக்கியத்துவம்* கொடுப்பதாக அவர் வாக்களித்தார்.




🔸 இயேசு தம்மைத் தாழ்த்தி தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தார். அவருடைய கீழ்ப்படிதல் அவருக்கு சிலுவை மரணத்தைக் கொண்டுவந்தபோதிலும் கீழ்ப்படிந்தார். எனவே, இயேசுவின் நாமம் எல்லாப் நாமத்துக்கும் மேலாக உயர்த்தப்பட்டது. இயேசுவை மகிமைப்படுத்துவது தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருகிறது. பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துகிறார்: *"ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்."* (பிலிப்பியர் 2:9-11). *சாலொமோனால் கட்டப்பட்ட ஆலயத்தில் செய்யப்படும் ஜெபங்களை விட இயேசுவின் நாமத்தில் செய்யப்படும் ஜெபங்கள் அதிக வல்லமை வாய்ந்தவை.* ஏனென்றால் இயேசுவின் நாமம் எல்லா நாமத்திற்கும் மேலானது.




🔸 பாவிகளின் ஜெபத்தை தேவன் கேட்கமாட்டார். தேவன் பாவத்துடன் சமரசம் செய்வதில்லை. எனவே, நாம் *பாவஅறிக்கை செய்து அவருடன் ஒப்புரவாகி* பின்பு நம்முடைய ஜெபங்களை ஏறெடுக்க வேண்டும். *"கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது."* (1 பேதுரு 3:12).




🔸 விசுவாசம் இல்லாமல், நாம் தேவனைப் பிரியப்படுத்த முடியாது, நம்முடைய ஜெபங்களுக்கு அவர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. *"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்."* (எபிரெயர் 11:6) என்று வேதம் கூறுகிறது. *"ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்ளுவீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்."* (மாற்கு 11:24) என்று இயேசு அறிவித்தார்.




🔸 அவருடைய சித்தத்தின்படி நாம் கேட்டால், தேவன் நமக்குச் செவிசாய்த்து, நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார். *“நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.”* (1 யோவான் 5:14) என்று வேதம் போதிக்கிறது.




🔹 *இயேசுவின் நாமத்தில் செய்யப்படும் நமது ஜெபங்கள் கேட்கப்பட்டு பதிலளிக்கப்படுகின்றன என்று நாம் சாட்சி கூறுகிறோமா?*

🔹 *நாம் தேவனுடைய சந்நிதிக்குச் செல்லும்போதெல்லாம், நம்முடைய ஜெபங்கள் கேட்கப்பட வேண்டும் என்பதற்காக, நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, தேவனோடு ஒப்புரவாகிறோமா?*




✅ நாம் கற்றுக் கொள்ளும் *பாடங்கள்*:




1️⃣ *சாலொமோனால் கட்டப்பட்ட ஆலயத்தில் செய்யப்படும் ஜெபங்களை விட இயேசுவின் நாமத்தில் செய்யப்படும் ஜெபங்கள் அதிக வல்லமை வாய்ந்தவை.*

2️⃣ *விசுவாசம் இல்லாமல், நாம் தேவனைப் பிரியப்படுத்த முடியாது, நம்முடைய ஜெபங்களுக்கு அவர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.*

3️⃣ *கர்த்தருடைய முகம் தீமை செய்கிறவர்களுக்கு விரோதமாயிருக்கிறது, அவர்களுடைய ஜெபங்கள் கேட்கப்படுவதில்லை.*

4️⃣ *நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், தேவன் நமக்குச் செவிகொடுக்கிறார்.*




Dr. எஸ். செல்வன்

சென்னை

[22/08, 04:43] +91 99431 72360: *நாள் 130 / 365*

*2 நாளாகமம் 6 - 8*




*கர்த்தருக்கு* *முன்பாகத்*

*தாழ்மைப்படுங்கள்*..







சாலொமோன், கர்த்தருடைய ஆலயத்தைப் பிரதிஷ்டை பண்ணின பின்பு..

கர்த்தரிடத்தில் ஜெபம்பண்ணினான்..

*கர்த்தருடைய* *ஆலயம்* .. *கர்த்தருக்குப் பலிசெலுத்தும்* *இடம் மட்டுமல்ல..அது எல்லா* *ஜனங்களுக்கும்* *ஜெப வீடாயிருக்கவேண்டும்*

*என்பதே சாலொமோனின்* *விருப்பமாகும்*..

( ஏசா. 56 : 7 ; மத்.21 : 13 )




சாலொமோன் தனது அரண்மனையில் ..தனது சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து..

ராஜ்யபாரம்பண்ணவேண்டியவன்..

ஆசரிப்புக் கூடாரத்திலும்..

ஆலயத்திலும்..ஆராதனை செய்வது..ஜெபிப்பது..

ஜனங்களை ஆசீர்வதிப்பது யாவும்..ஆசாரியரின் ஊழியங்களாகும்..




இங்கே சாலொமோன், வெண்கலப் பிரசங்கப் பீடத்தின் மேல் நின்று..இஸ்ரவேல் சபையார் எல்லாருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு..தன் கைகளை வானத்திற்கு நேராக

விரித்து..என்று 2 நாளா.6 :13ல்

பார்க்கிறோம்..




ஒரு ராஜா முழங்காற் படியிடுவது ..ஒரு அசாதாரண செயல்... காரணம், ராஜாவுக்கு முன்பு ஜனங்கள்தான் முழங்காற்படியிடுவார்கள்.. சாலொமோன், அங்கே ஜனங்கள் முன்

முழங்காற்படியிட்டது, இஸ்ரவேலை ஆளுகை செய்பவர்.. சாலொமோன் அல்ல, தேவாதி தேவனே என்பதை ஜனங்களுக்கு வெளிப்படுத்தியது.




ஒரு நாளிலே, உடன்படிக்கைப் பெட்டியை..எருசலேமுக்குக் கொண்டுவரும்போது.. தாவீது அதற்கு முன் நடனமாட வெட்கப்படவில்லை..

இங்கே சாலொமோன், ஜனங்கள் முன்னால் வெளிப்படையாகத் தன்னைத் தாழ்த்தி.. முழங்காற்படியிட வெட்கப்படவில்லை.




*முழங்காற்படியிடுவது*..

*தேவனே ,நீர் எல்லாவற்றிற்கும்*

*மேலானவர் என்று ..கர்த்தரை* *மகிமைப்படுத்துவதற்கும்*..

*தேவனே,எங்களால் எதுவும்* *செய்யமுடியாது.. உம்மால்* *மட்டுமே எல்லாம் செய்ய* *முடியும் என்று நம்மைத்* *தாழ்மைப்படுத்துவதற்கும்* *அடையாளமாகும்*..




கைகளை விரித்து ஜெபம்பண்ணுவது.. நம்முடைய

இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக விரிவாய்த் திறப்பதற்கும்..

கைகளை வானத்திற்கு நேராக

விரித்து ஜெபம்பண்ணுவது..

பரலோகத்தின் தேவனே ..

உம்முடைய கிருபைகளையும்..

இரக்கங்களையும் பெற்றுக்கொள்வதற்கு.. நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம்

என்பதற்கும் அடையாளமாகும்..




இன்று முழங்காலில் நின்று ஜெபிப்பது குறைந்து வருகிறது அல்லவா?

ஆலயத்திலே,ஆராதனையிலே முழங்காற்படியிட முடிந்தும்.. (வயோதிபர்.. பெலவீனர் தவிர) முழங்காற்படியிட விரும்பாமல் இருப்பது, எங்களுக்கு ஆண்டவருடைய உதவி தேவை இல்லை ... எங்களுக்குப் பணம்.. பதவி.. செல்வாக்கு இருக்கிறது.. அது போதும் என்பதை வெளிப்படுத்துவது போன்றதுதான்.




*வேதாகமத்தில் அநேகர்* *முழங்காற்படியிட்டு* *ஜெபித்ததைப்* *பார்க்கிறோம்*. *பவுலும், அவரோடிருந்தவர்களும்..* *கடற்கரையில்,*

*முழங்காற்படியிட்டு* *ஜெபித்தார்கள்*.

(அப் .21:5 )

*இயேசு கிறிஸ்து கெத்செமனே* *தோட்டத்தில் முழங்காற்படியிட்டு ஜெபித்தார்*.

(லூக் .22:41)




*நம்மை உண்டாக்கின* *தேவனுக்கு முன்பாகப் பணிந்து..* *குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்* *என்ற.. 95ம் சங்கீதத்தை*..

*நாம்அதிகமாக* *அறிந்திருக்கலாம்* ..

*ஆனால் நம் வாழ்வில், பணிவும்*..

*தாழ்மையும் வெளிப்படுகிறதா*..?




மாலா டேவிட்

[22/08, 04:43] +91 99431 72360: நாள் : 130

22.08.2023

செவ்வாய்கிழமை.

(2நாளாகமம் : 6-8)

💐💐💐💐💐💐💐

சாலொமோன் கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டி முடித்த பின்னர் ஒரு வெண்கலப் பிரசங்க பீடத்தை உண்டாக்கி அதன் மேல் நின்று இஸ்ரவேல் சபையாருக்கு எதிராக *முழங்காற்படியிட்டு* தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து கர்த்தரிடம் விண்ணப்பம் ஏறெடுத்தார் என்று வாசிக்கிறோம்.

(2 நாளாகமம்: 6:13)

★முழங்காற்படியிடுதல் தாழ்மையைக் குறிக்கிறது.

சாலொமோன் யாவருக்கும் முன்பாக முழங்காற்படியிட்டது கர்த்தருக்கு முன்பாக அவருடைய தாழ்மையைக் காண்பிப்பதோடு நமக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

★ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் முழங்காற்படியிட்டு ஜெபித்ததை லூக்கா 22: 41-42 ல் காண்கிறோம்.

★சாலொமோன் தன் *கரங்களை வானத்திற்கு நேராக விரித்து* கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினார் என வாசிக்கிறோம்.

★கைகளை விரித்து ஜெபிப்பது என்பது நம் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக விரிவாய் திறப்பதற்கு அடையாளமாகும்.

★பரலோகத்தில் வீற்றிருக்கும் உன்னதமானவருக்கு நேராக *கரங்களை விரித்து ஜெபிப்பது கர்த்தருடைய கிருபைகளையும் இரக்கங்களையும் பெற்றுக்கொள்வதற்கான ஆயத்தநிலை*.

★எந்த நிலையிலும் நாமும் கர்த்தருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, கர்த்தரின் கிருபைகளையும் இரக்கங்களையும் பெறவேண்டும் என்ற ஆயத்தத்துடன் ஜெபிக்கும் வழக்கத்தை வைத்துக் கொள்வோமாக.

*ஆமென்*

💐💐💐💐💐💐

✍️ Bhavani Jeeja Devaraj, Nagercoil




[22/08, 04:43] +91 99431 72360: 2. நாளாகமம்.8.

☘️☘️☘️☘️☘️☘️

"சாலொமோன் சாதனைகள்"

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

.சாலொமோன் கோவிலைக் கட்ட ஏழு வருடங்களும், அவருடைய அரண்மனையைக் கட்ட 13 வருடங்களும் எடுத்தது.

இந்த இருபது வருடங்களின் முடிவில் அவருடைய ராஜ்யம் பாதுகாப்பாகவும், நிலையானதாகவும், ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் இருந்தது.

இது சாலமோனின் சிறந்த இதயத்தையும், ஒரு கட்டிடக் கலைஞராக இருந்த லட்சியத்தையும் பிரதிபலிக்கிறது.

அவர் ஆற்றலுடன் புதிய நகரங்களைக் குடியமர்த்தினார் மற்றும் சேமிப்பு , நகரங்கள், கோட்டைகள், தேர் நகரங்கள் மற்றும் குதிரைப்படை நகரங்களை கட்டினார்.

விவேகமற்ற திருமணங்கள் சாலொமோனின் ஆன்மீக வீழ்ச்சியைத் தொடங்கின.

அவருடைய மனைவி அவிசுவாசியாகவும் பரிசுத்தமில்லாதவளாகவும் இருந்தாள்.

சாலொமோன் இஸ்ரவேல் மக்களை தைரியமாக புதிய முயற்சிகளுக்கு அழைத்துச் சென்றார்.

சாலமோனின் எல்லா வேலைகளும் ஒழுங்காக இருந்தன.

இது அவரது சிறந்த ஞானத்தின் பிரதிபலிப்பாகவும், இஸ்ரவேல் ராஜ்யத்தை வழிநடத்த உதவிக்காக அவர் செய்த ஜெபத்திற்கான பதிலாகவும் இருந்தது.

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

மேபி சுந்தர்.சென்னை.இந்தியா.குழு எண்.2196

[22/08, 04:43] +91 99431 72360: *தேசத்திற்கு ஷேமம்*

~~~~~~~~~~~~~~~




2 நாளாகமம் 7: 13, 14.




1. சாலொமோன் கர்த்தருக்கு ஆலயத்தை கட்டி, பிரதிஷ்டை பண்ணி, பலி செலுத்திய போது, *இரவிலே கர்த்தர் சாலொமோனுக்கு தரிசனமாகி,* ஒரு இரகசியத்தை கூறுகிறார். அது என்ன?




1. *கர்த்தர் மழையில்லாதபடி வானத்தை அடைக்கிறார்*




2. *தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்கு கட்டளையிடுகிறார்.*




3. *ஜனங்களுக்குள் கொள்ளை நோயை அனுப்புகிறார்.*




2. ஆம், இன்று உலகத்தின் பல பாகங்களிலும் மழையில்லை. வறட்சி, பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. சில இடங்களில் பெருமழையினால் சேதமும் ஏற்படுகிறது. எப்படியாயினும் *கர்த்தரே வானத்தை அடைக்கிறார். திறக்கிறார். சில நாடுகளில் வெட்டுகிளிகளால் பயிர் சேதம் உண்டாயின. மட்டுமல்ல, கொரோனா கொள்ளை நோயை கர்த்தர் அனுப்புகிறார்*. எவ்வளவு மரணங்கள் ! நஷ்டங்கள்! பஞ்சங்கள்! ஆம், முதலில் நாம் சந்தித்த கொரோனாவை விட, மிக பெரிய, கொள்ளை நோய் ஆரம்பிக்க போகிறது என உலக சுகாதார நாடுகள் நம்மை எச்சரிக்கிறது. *அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன?*




3. *என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள்*, அதாவது கிறிஸ்துவின் நாமம் தரிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் செய்ய வேண்டியவற்றை கர்த்தர் இங்கு கூறுகிறார்.




1. *தங்களை தாழ்த்த வேண்டும்*. கிறிஸ்து சிலுவையின் மரண பரியந்தம் தன்னை தாழ்த்தினார் அல்லவா? நாம் நம்மை எவ்வளவு தாழ்த்துகிறோம்? அப்படியானால் பெருமை, மேட்டிமை, நான் என்கிற எண்ணம், அகங்காரம் ஆகிய குணங்கள் நம்மில் இருக்க கூடாது. நாம் நிற்பதும், நிர்மூலம் ஆகாததும் அவர் கிருபையே




2 . *ஜெபம் பண்ண வேண்டும்.* 1 மணி நேரம் கூட சீஷர்களால் ஜெபிக்க முடியவில்லை அல்லவா ? நம்முடைய சுய பெலனால் ஜெபிக்க முடியாது. ஆகவே ஜெப ஆவியை, ஜெப வரத்தை நாம் ஜெபித்து, கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.



3 . *அவர் முகத்தை தேட வேண்டும்*. ஆம், அவருடைய முகத்தின் பிரகாசம் நம் முகத்தையும் பிரகாசிக்க பண்ணும். அவர் முகத்தை தேடினவர்கள் ஓருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை.




4. *தங்கள் பொல்லாத வழிகளை விட்டு திரும்ப வேண்டும்.* ஆம், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, மனம் திரும்ப வேண்டும்.




ஆம், இந்த நாட்களில் கூட நாமும் இவைகளை செய்ய மறவாதிருப்போம்.




4. *அப்பொழுது பரலோகத்திலிருக்கிற தேவன் ஜெபத்தை கேட்பார்*




*அவர்கள் பாவத்தை மன்னிப்பார்.*




*தேசத்திற்கு ஷேமத்தை கொடுப்பார்.*




ஆம், இன்று நம் தேசத்தில் மழை இல்லையா? வறட்சியா? வெட்டுகிளியா? பஞ்சமா? கொள்ளை நோயா? நம் தேசத்தில், வாழ்க்கையில் ஷேமம் உண்டாக கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென். அல்லேலூயா.




*Dr.Padmini Seĺvyn*


[22/08, 14:04] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்*




*2 நாளாகமம் 6-8*




*பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே.* (2 நாளா 6:36).




*🙇🏻‍♂️6ம் அதிகாரத்திலுள்ள சாலொமோனின் ஜெபமும், 7ம் அதிகாரத்தில் தேவன் அதற்குக் கொடுத்த பதிலும்,* சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த யூதர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. சமஸ்த இஸ்ரவேலும் அந்த அற்புதமான ஆலயத்திற்கு முன் நின்று கொண்டிருக்கையில், *அக்கினி வானத்திலிருந்து இறங்கியது, கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரம்பிற்று.* பிற்காலத்தில், இந்த ஆலயம் இடிக்கப்பட்டு, ஜனங்கள் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போய் திரும்பியபின், எஸ்றா ஒரு புதிய ஆலயத்தை இங்கே கட்டினான். ஆனால் அப்பொழுது *அக்கினி இறங்கவில்லை; கர்த்தருடைய மகிமை மீண்டும் காணப்படவில்லை.*




*சாலொமோன் மிகுந்த பயபக்தியோடும், கீழ்ப்படிதலோடும்*, தேவனுக்கு முன்பாக ஜெபித்தான்.

*🤷🏻‍♂️ நின்று தன் கைகளை விரித்தான்.* (6:12)

*🛐 முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்தான்.* (6:13).

*🙇🏻‍♂️எப்படியும் ஜெபிக்கலாம் என்பதைவிட, இப்படித்தான் ஜெபிக்கவேண்டும் என்று கற்றுக் கொடுப்பது நல்லது.*




*🙇🏻‍♂️சாலொமோனின் இந்த ஜெபம், ஒரு தீர்க்கதரிசனம் என்றால் மிகையாகாது.* ஏனென்றால், *அயலானுக்கு எதிரான குற்றம் (6:22-23), சத்துருவுக்கு முன்பாக முறிந்தோடுதல் (24-25), வறட்சி (26-27), பஞ்சம், கொள்ளை நோய், முற்றுக்கை, வியாதி (28-31), அந்நிய தேசத்தாரின் ஊடுருவல் (32-33), யுத்தம் (6:34-35), சிறையிருப்பு (6:36-39), யாவும் பிற்காலத்தில் இஸ்ரவேலுக்கு நேர்ந்தது.*




🙇🏻‍♂️சாலொமோன் மனத்தாழ்மையோடு, *பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே* என்று இஸ்ரவேலுக்காக மன்றாடினான். இந்த உண்மையை சங்கீதம் 14:3, பிரசங்கி 7:20, ரோமர் 3:23 லும் காண்கிறோம். *பாவத்தின் சம்பளம் மரணம். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்.* எனவே நமக்காகவும், எல்லாருக்காகவும் தாழ்மையோடு மன்றாடுவோம். ஆமென்.




பிரேமா ராஜசிங்

Group Coordinator


[22/08, 14:04] +91 99431 72360: 📖 *365 நாட்களில் வேதாகமம்* 📖




📗 *சிறிய குறிப்பு* 📗




🍂 *தனி வீடு* 🍂




பார்வோனின் மகள் சாலொமோனின் முதல் மனைவி. அது *அரசியல் கூட்டணிக்கான திருமணம்.* அவள் எருசலேமில் வசிக்க வந்தாள். இந்த நேரத்தில் *சாலொமோனின் இருதயம் தேவனாகிய கர்த்தருக்கு மிகவும் நெருக்கமாக* இருந்தது.




*அவனது தகப்பன் தாவீதின் வீட்டில் வசிக்கும் யூதரல்லாத மனைவி அவனை கவலையடையச் செய்தாள்*. மேலும் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டி சிறிது காலம் அங்கே இருந்தது. *அவனது எகிப்திய மனைவியாலும், அவளுடைய எகிப்திய பழக்கங்களாலும் அந்த இடம் தீட்டுப்படுவதை அவன் விரும்பவில்லை.*




திட்டமிட்டு அவளுக்கு தனி வீடு கட்டினான். *சரியான நேரத்தில் சாலொமோன் தன் மனைவியான பார்வோனின் மகளை* அவளது எகிப்திய உதவியாளர்களுடன் அந்த வீட்டிற்கு மாற்றினான் (2 நாளா 8:11). நாம் *ஆண்டவருக்கு நெருக்கமாக இருக்கும் வரை, நம் மனசாட்சி கூர்மையாகவும்* தெளிவாகவும் இருக்கும்.




*சிறிய தவறு கூட நம்மை கலங்க வைக்கிறது*. மேலும் அதை சீக்கிரம் சரிசெய்ய முயற்சிக்கிறோம். எனவே நாம் *எப்பொழுதும் பரிசுத்த ஆவியானவரின் மென்மையான வழிநடத்துதலுடன் இணைந்திருப்பது மிகவும் முக்கியம்.*




_திருமதி ஷீலா ஜெபக்குமார்_ ✍🏼

_ஆகஸ்ட் 22, 2023_



[22/08, 14:04] +91 99431 72360: *🌈GOD’S COVENANTAL PROMISE🌈*




*🌈தேவனுடைய உடன்படிக்கையின் வாக்குறுதி🌈*




நாள் - 130

2 நாளாகமம் 6-8




☄️சாலொமோனின் ஆலய பிரதிஷ்டை பிரார்த்தனை மற்றும் தேவனுடைய இரண்டாவது தோற்றம், 2 நாளாகமம் 6-8 அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது.




1️⃣ *சாலொமோனின் தேவாலய பிரதிஷ்டை பிரார்த்தனை*




🔹நுணுக்கமான திட்டமிடல் மற்றும் கட்டுமானத்திற்குப் பிறகு, சாலொமோன் எருசலேமில் உள்ள அற்புதமான தேவாலயத்தை கட்டி முடித்து, தாவீது ராஜாவின் கனவை நிறைவேற்றினார்.

🔹சாலொமோன் இஸ்ரவேலர்களை வரவழைத்து, ஆலயத்தின் பரிசுத்தப்படுத்துதலையும் பிரதிஷ்டையையும்

காண முழு சபையையும் ஒருங்கிணைத்தார். இசையுடன் தேவனைத் துதித்தார்கள், கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று!

🔹தன் ஜெபத்திற்கு முன், சாலொமோன் சபையில் உரையாற்றி, தேவனுடைய உண்மையையும் அவருடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தையும் விவரித்தார்.




2️⃣ *சாலொமோனின் பிரதிஷ்டைப் பிரார்த்தனை*




🔸சாலொமோன் தேவனுடைய அளவு கடந்த மகத்துவத்தை ஒப்புக்கொண்டு, இந்த மேன்மையான ஆலயம் கூட அவரைக் கொண்டிருக்க முடியாது என்பதை வலியுறுத்தினார்.

🔸சாலொமோன் தேவனை இந்த ஆலயத்தில் வாசம் செய்யும்படியும், தம்முடைய ஜனங்களின் ஜெபங்களைக் கேட்கும்படியும், அவர்கள் மனந்திரும்பும்போது அவர்களுடைய பாவங்களை மன்னிக்கும்படியும் வேண்டிக்கொண்டார்.

🔸சாலொமோன் தேசத்தின் மீது தேவனுடைய தொடர்ச்சியான ஆசீர்வாதங்களுக்காக ஜெபித்தார், எதிர்கால சந்ததியினருக்கு தெய்வீக வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் நாடினார்.




3️⃣ *சாலொமோனுக்கு தேவனுடைய இரண்டாவது தோற்றம்*




🔺சாலொமோனின் ஜெபத்தைத் தொடர்ந்து, தேவன் அவருக்கு இரண்டாவது முறையாகத் தோன்றி, ஆலயத்தையும் அதன் நோக்கத்தையும் அவர் அங்கீகரிப்பதை உறுதிப்படுத்தினார்.

🔺தேவன் சாலொமோனின் ஜெபத்தைக் கேட்டதாக உறுதியளித்தார், ஆலயத்தை ஒரு வாசஸ்தலமாகத் தேர்ந்தெடுத்து, அதை நிரந்தரமாகக் கண்காணிப்பதாக உறுதியளித்தார்.

🔺தேவன் சாலொமோனுக்கு கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தை நினைவூட்டினார், அவரும் தேசமும் உண்மையாக இருந்தால் ஆசீர்வாதங்களையும் செழிப்பையும் வாக்களிக்கிறார்.

🔺விசுவாசிகள் தங்கள் பிரார்த்தனைகளில் தேவனுடைய மேலாதிக்கத்தை ஒப்புக்கொண்டு, பயபக்தியுடன் அவரை அணுக ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

🔺தேவனுடைய பிரசன்னத்தையும் ஆசீர்வாதங்களையும் பெற விசுவாசிகளாக நாம் ஒன்று கூடுவது முக்கியம்.

🔺 சாலொமோனுக்கு தேவனுடைய இரண்டாவது தோற்றம், அவருடைய உடன்படிக்கை வாக்குறுதியையும், அவருடைய வாக்குறுதிகளைக் கடைப்பிடிப்பதில் அவருடைய உண்மையையும் வலுப்படுத்துகிறது.




♥️ *வாழ்க்கை பாடங்கள்*




💥சாலொமோனின் பிரதிஷ்டை ஜெபம், மனத்தாழ்மை, பயபக்தி மற்றும் தேவனுடைய உண்மையில் நம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

💥தேவனுடைய பிரசன்னம் பௌதிக அமைப்புகளுக்குள் மட்டும் நின்றுவிடாமல், விசுவாசிகள் ஒற்றுமையுடன் கூடும் இடங்களிலெல்லாம் அனுபவிக்க முடியும் என்பதை இந்த நிகழ்வுகள் விசுவாசிகளுக்கு நினைவூட்டுகின்றன.

💥தேவன் தம் வாக்குறுதிகளில் கொண்டிருக்கும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அவைகள் உறுதிப்படுத்துகின்றன.




*‼️தேவனுடைய உறுதியான உண்மையில் நம்பிக்கை வைத்து தாழ்மையான இருதயங்களுடன் அவரை அணுகுவோம்‼️*




பிரின்சஸ் ஹட்சன்




தமிழாக்கம் இன்னிசை செல்வி மும்பை



[22/08, 14:04] +91 99431 72360: ஷாலோம் 🙏

ஆசீர்வதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டேன் 👨‍👩‍👦‍👦




🙋‍♂️🙋‍♀️ நாம் *2 நாளாகமம் 7** இல் இருக்கிறோம்




*GOD'S LAST WORD IN THE TEMPLE*




*ஆலயத்தில் தேவனுடைய கடைசி வார்த்தை*




📝 நாம் மகிழ்ச்சியுடன் கொடுக்கும்போது புத்திசாலித்தனமாக கேட்கலாம் என்று சாலொமோன் ராஜா நமக்குக் கற்பிக்கிறார். கிபியோனிலும் எருசலேமிலும் சரி; பெசலெயேலின் பலிபீடத்திலோ அல்லது புதிய வெண்கல பலிபீடத்திலோ - *சாமுவேல் முழு மனதுடன் கொடுக்கிறார்*. பின்னர் தேவனுடைய ஆலயம் *"ஜெப ஆலயம்"* மற்றும் *"பலியிடும் ஆலயம்"* ஆக மாறுகிறது (வ. 12)




🙋‍♂️🙋‍♀️ இன்றைய வாசகம் சாலமோனுக்கு தேவன் தரிசனமானதைக் கூறுகிறது, மேலும் அவர் சாலமோனிடம் மூன்று விஷயங்களைத் துல்லியமாகக் கூறினார் (வ. 12அ) :




1️⃣ சாலொமோனின் அர்ப்பணிப்பு ஜெபத்திலிருந்து, பாவத்திற்கான தண்டனையின் மூன்று உதாரணங்களை தேவன் சுட்டிக்காட்டுகிறார் ( *வ. 13* )

📍 வறட்சி ( *வயல்கள்*)

📍 வெட்டுக்கிளிகள் ( *பயிர்கள்* )

📍 கொள்ளைநோய் ( *மக்கள்*)




🙋‍♂️🙋‍♀️ அதற்கான ஒரு பரிகாரம் உண்டு கர்த்தர் கூறுகிறார், *"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்திற்கு ஷேமத்தைக் கொடுப்பேன்"* வ 14




✅ ஒரு அழைப்பு ( *மக்களின் பங்கு*) உள்ளது

📍 தாழ்த்த வேண்டும்

📍 ஜெபம் செய்ய வேண்டும்

📍 அவரைத் தேட வேண்டும்

📍 மனந்திரும்ப வேண்டும்

✅ உறுதியாக உள்ளது ( *கர்த்தரின் பங்கு*) :

📍 அவர் கேட்பார்

📍 அவர் மன்னிப்பார்

📍 அவர் குணப்படுத்துவார்




2️⃣ சாலமோனின் ஜெபம், கர்த்தருடைய மக்கள் எங்கிருந்தாலும், அவர்கள் *" ஜெபித்து, ஆலயத்துக்கு நேராக திரும்பினால், தேவன் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பார்"* (2 நாளா 6:38-39)

🙋‍♂️🙋‍♀️ கர்த்தர் சாலமோனின் வேண்டுகோளை உறுதிப்படுத்துகிறார், *" இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்"* வ 15




✅ *நமது திருச்சபைகளில் நாம் செய்யும் ஜெபங்கள் எப்படி இருக்கிறது* ❓

✅ *அது அவரது கவனத்தை ஈர்க்கிறதா* ❓




3️⃣ கர்த்தர் எச்சரிக்கிறார்:

📍 அவர்களின் கீழ்ப்படியாமையினிமித்தம் தேசத்திலிருந்து தள்ளிவிடுவேன் ( *வ 19 -20a* )

📍 கர்த்தர் ஆலயத்தை நிராகரிப்பார், அது பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் மாறும் ( *வ 20b -21* ; ஏரேமி 52:13 )




🙋‍♂️🙋‍♀️ பிரியமான திருச்சபையே, சிதறுண்டு போன தேசங்களில் இருந்து தவம் செய்த இஸ்ரவேலர்களின் ஜெபங்களுக்கு கர்த்தர் உண்மையிலேயே கவனம் செலுத்தியதாக பதிவுகள் கூறுகின்றன. மனமுடைந்த இருதயத்துடன் அவருடைய பிரசன்னத்திற்கு வருவதற்கு இது ஒரு விழித்தெழும் அழைப்பு, ஏனென்றால் வேதாகமத்தின் தேவன் நம் ஜெபங்களைக் கேட்பவர் மற்றும் அவருடைய நேரத்தில் நமக்குப் பதிலளிப்பார்.




தேவனுக்கே மகிமை 🙌

✍️ *மார்க் போஜே*

அருணாச்சல பிரதேசம், இந்தியா 🇮🇳




தமிழாக்கம் ஜஸ்டஸ் ராஜேந்திரன்


[22/08, 18:42] +91 99431 72360: 22.08.2023




*🌈சிப்பிக்குள் முத்து🌈*




இன்றைய வேத வாசிப்பு பகுதி -

*2 நாளா : 6 - 8*




*🔥முத்துச்சிதறல் : 130*




🍒🍀🍒🍀🍒🍀

*🪢பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு.....*

(6:23)

🍒🍀🍒🍀🍒🍀




*✒️நம்முடைய ஆண்டவர் பரலோகத்தில் வாசம் பண்ணுகிறவர். மனு மக்களின் விண்ணப்பங்களின் சத்தத்தை கேட்பவர்.*

கர்த்தரின் நாமம் பூமியெங்கும் விளங்கும்படி சாலொமோன் கட்டிய பிரமாண்டமான தேவாலயத்தை கர்த்தருக்கென்று அர்ப்பணம் (பிரதிஷட்டை) செய்த பின்னர், எதிர்காலத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் இஸ்ரவேல் ஜனங்கள் செல்ல நேர்ந்தால்... கர்த்தர் அவர்களுக்கு மனம் இரங்கும்படி *தனது "விண்ணப்பங்கள் பொதியபட்ட வேண்டுதல்கள் அடங்கிய பிராத்தனையை"* ஆண்டவருக்கு நேரே ஏறெடுக்கிறார்.




அப்படி ஏறெடுக்கையில் அந்த முழு ஜெபத்திலும் அடிக்கடியாக

*7 - 8 முறை,* *"பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு... " என்னும் பதத்தை கையாள்கிறார்.* கர்த்தர் தமது மகிமை என்னும் பிரசன்னத்தினால் அந்த தேவாலயத்தை நிரப்பினாலும், அவருடைய வாசஸ்தலம் என்றுமே பரலோகம் தான் என்பதை சாலொமோன் அரசர் அறிந்தும் உணர்ந்தும் இருந்தார்.




ஆம்,

*கைகளினால் கட்டப்பட்ட தேவாலயத்தில் அவர் வாசம் செய்யார்.*

*ஆனால் மனுஷர்கள் மத்தியில் உலாவ விரும்புகிறார்.*




யாவும் கர்த்தரின் வெளிப்பாட்டின்படி, மற்றும் திட்டபடி செய்யப்பட்டபோது தாம் அதை அங்கீகரித்துக்கொண்டதற்க்கு அடையாளமாக தமது மகிமையை அங்கு பிரத்தியட்சப்படுத்தி காண்பித்தார், அவ்வளவே.

*மற்றபடி அவர் வசிப்பது பரலோகத்தில் தான் என்பது சாலோமோனுக்கும் தெளிவு.*




*✒️எதிர்காலத்தில்*

1. பாவம்

2. சத்துருக்களின் படையெடுப்பு

3. மழை தாழ்ச்சி

4. பஞ்சம்

5. வியாதிகள்

6. யுத்தம்

7. சிறையிருப்பு

*போன்ற நிலைகள் தேசத்திற்கு ஏற்படும் பொழுது, அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும், தங்கள் முழு ஆத்துமாவோடும், கர்த்தரிடம் திரும்பி, இந்த ஆலயத்திற்கு நேராக, அல்லது இந்த , உம்முடைய சந்நிதியிலே விண்ணப்பம் செய்வார்களாகில்,.... "பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு".... மன்னிப்பீராக, பதில் அளிப்பீராக, என்கிறார் சாலொமோன் உருக்கமாக.*

(6:21,23,25,27,30,32,35, 39)

இப்படி சொல்லி, தனது வேண்டுதலை சாலொமோன் முடிக்கவும் அப்படியே அவர் கேட்டு கொண்டதற்கு பதில் கிடைத்ததற்கு அடையாளமாக *"அக்கினி வானத்தில் இருந்து இறங்கி",* அவர்கள் செலுத்திய அத்தனை பலிகளையும் பட்சித்தது.




*✒️நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்.*

(சங்கீ - 115:3)




*✒️ அவருடைய சிங்காசனமும் பரலோகத்தில் தான் இருக்கிறது.* (சங்கீ - 11:4)




*✒️ நாம் ஜெபிக்கும் போது பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, என்று வேண்டுதல் செய்ய சொல்லி கொடுத்துள்ளார் இயேசு பிரான்.* (லூக் - 11:2)




*✒️ நம்முடைய தேவனும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து ஏற்கனவே பரலோகத்தில் இருந்தவர்.*




*✒️ எம்மை பாவத்தில் இருந்து விடுதலை ஆக்கும்படி, தமது சொந்த இரத்தத்தை (உதிரத்தை) எமக்காக சிந்தி எம்மை மீட்கும்படி அவர் அதே பரலோகத்தில் இருந்து பூலோகத்திற்கு இறங்கி வந்த தேவ குமாரன். இப்பொழுது உயிரோடு பரலோகத்தில் இருக்கிறார்.*

(யோ - 3:13)




*✒️ ஆகையால் பரலோகத்தின் தேவனை மாத்திரம் நாம் துதிக்கவும், பரலோகத்தில் இருக்கிற தேவனிடத்தில் மாத்திரம் எமது விண்ணப்பங்களை ஏறெடுக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.*

(சங்கீ - 136:26:, நெகே - 1: 4,5 :, 2:4)




*✒️ பரலோகத்தில் வாசமாயிருக்கும் தேவனிடம் எமது விண்ணப்பங்களை உண்மையாக ஏறெடுப்போம். அவர் தமது விலையேற பெற்ற குறுதியால் இரட்சிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆத்துமாவின் உள்ளத்திலும் வாசம் செய்கிறார்.*




*✒️ அவர்கள் அனைத்து பேரும் பரலோக வாசிகளாக இருப்பதால், "இகமும், பரமும் ஒன்றிணைந்து செயல்பட", அவரை தொடர்ந்து பற்றிக்கொண்டு, இசைந்த ஆத்துமாவாக செயல்படத்தக்கதாக, கர்த்தரோடு இசைந்து இருப்போம்.*




*✒️ அவர் பிரசன்னத்தால் நிறைந்தும் இருப்போம்.* (1கொரி - 3:16)




*✒️ எமக்கு விருப்பமானவற்றையெல்லாம் அவரது பலிபீடத்தில் வைத்து விட்டோமானால், எமது இருதயத்தில் "வான அக்கினி இறங்கி", அவரது பிரசன்னத்தால் நாம் எந்நாளும் ஆட்கொள்ளப்பட்டிருப்போம்.*

அதை மற்றொர் கண்டுகொள்ளுவார்கள். அதே வேளை இறைவனுக்கும் எம்மால் மகிமை உண்டாகும்.




*✒️சாலமோன் அரசனின் ஜெபத்தன்று இரவு கர்த்தர் அவரிடம் :* நான் உன் விண்ணப்பத்தை கேட்டு, இந்த ஸ்தலத்தை எனக்கு பலியிடும் ஆலயமாக தெரிந்து கொண்டேன். இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாய் இருக்கும்...... நீ உன் தகப்பனாகிய தாவீது நடந்தது போல, நீ எனக்கு முன்பாக நடந்து, நான் உனக்கு கற்பித்த படியெல்லாம் செய்து, என் கட்டளைகளையும், நியாயங்களையும் கை கொள்ளுவாயானால்.... *என்று நிபாந்தனை விதித்தார்.*

(2 நாளா - 7 : 12, 15, 17)

ஆகையால் சாலமோன் அன்று செய்த விண்ணப்பத்திற்கு கர்த்தர் நிபாந்தனை போட்டு இருந்தார்.

அவர் சந்ததி வழி விலகி சென்றதால்.... பிற்காலத்தில் அந்த ஆலயம் எண்ணப்படாமற் போகும் அளவுக்கு காரியம் சென்றது.




*✒️ நமது இதயமாகிய ஆலயத்தை என்றும் கர்த்தர் கண்ணோக்க வேண்டுமானால்,* அதில் இருந்து ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் பரலோகத்தில் வீற்றிருக்கும் ஆண்டவர் கேட்க வேண்டுமானால்.... நாம் வழி விலகாமல் கர்த்தரை, அவரது வழிகளை, அவர் எமக்கு வேதத்தில் கற்பித்து கொடுத்து இருப்பாவைகளை, காத்து நடக்க கர்த்தரால் எதிர் பார்க்க படுகிறோம்.




*Sis. Martha Lazar✍️*

NJC, KodaiRoad.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.