=====================
வேதாகம திருச்சபை! (The Biblical Church) (பகுதி - 6)
=====================
வேதாகம திருச்சபையின் கடமைகள்!
1. கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் தேவனுக்கு மகிமை உண்டாக்குவது.
(எபேசி.3:21; மத்.5:16)
2. இயேசு கிறிஸ்துவின் நாமத்தை தொழுவது. (1கொரிந்.1:2)
3. கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது. (எபேசி.5:24)
4. ஆவியானவர் சொல்லுகிறதை கேட்பது. (வெளி.2:7)
5. கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக கிறிஸ்துவுக்கு முன்பாக நிற்பது. (எபேசி.5:27)
6. அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஒருவரையொருவர் ஏவுவது. (எபிரே.10:24,25)
7. ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருப்பது. (1தீமோத்.3:15)
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
=========================
வேதாகம திருச்சபை! (The Biblical Church) (பகுதி - 7)
=========================
தமது சபையை குறித்த தேவனுடைய நிகழ்கால திட்டம் என்ன?
இயேசுகிறிஸ்துவின் உள்ளான சாயலுக்கு ஒப்பாக்குவதே
தமது ஜனங்களாகிய சபையை குறித்த தேவனுடைய நிகழ்கால திட்டமாகும்.
தமக்கு முன்பாக நாம் அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாய் இருக்கும்படி, தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். (எபேசி.1:4-6; 1கொரி.13:1-8)
இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நாம் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டபடி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நாம் களைந்துபோட்டு, நமது உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தம்முடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனை நாம் தரித்துக்கொள்ள தேவன் விரும்புகிறார். (எபேசி.4:21-24; 2:10)
பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, நம்மைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படிக்கே, நாம் புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறோம். (கொலோ.3:10; 2கொரி.5:17)
நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். (2கொரி.3:18; ரோமர் 8:13; கலாத்.5:22,23)
நாம் தம்முடைய அனைத்து குணங்களையும் உடையவர்களாய் இருக்க இயேசுகிறிஸ்து விரும்புகிறார். (மத்.5:1-19; 7:22,23; எபேசி.4:11-15)
🫵 *தமது சபையை குறித்த தேவனுடைய எதிர்கால திட்டம் என்ன?*
இயேசுகிறிஸ்துவின் புறம்பான சாயலுக்கு ஒப்பாக்குவதே
தமது ஜனங்களாகிய சபையை குறித்த தேவனுடைய எதிர்கால திட்டமாகும்.
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். (ரோமர் 8:29)
வானத்துக்குரியவர் (இயேசுகிறிஸ்து) எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களாய் இருக்கப்போகிறோம். (1கொரி.15:42-48)
மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்.
(1கொரி.15:49-54)
இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போம். (1யோவான் 3:2)
தமது சாயலாயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் சாயலாக நம்மை மாற்றுவதின்மூலம், தேவன் நம்மை மீண்டும் தமது சாயலுக்கு ஒப்பாக்கவிருக்கிறார்! (2கொரி.4:4; பிலிப்.2:6; கொலோ.1:15; எபிரே.1:3)
வேத அடிப்படையில் சபையை நடத்துவோர், தேவனுடைய சபையாகிய அவருடைய ஜனங்கள் இயேசுகிறிஸ்துவின் வருகையில் அவருடைய புறம்பான சாயலுக்கு ஒப்பாகுவதற்கு ஏற்றவகையில், அவருடைய உள்ளான சாயலுக்குள் அவர்களை நடத்த அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியம்!!
க. காட்சன் வின்சென்ட்.
(கோயம்பத்தூர்)
8946050920
========================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 8)
=========================
சபைக்கும் தேவனுக்குமான உறவு என்ன?
சபை தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானம்! (எபேசி.3:9-11)
ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் சபையை தெரிந்துகொண்டு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக சுவிசேஷத்தினாலே அழைத்திருக்கிறார். (2தெச.2:14)
சபை பிதாவாகிய தேவனுக்குள் இருக்கிறது. (1தெச.1:1; 2தெச.1:1)
தேவனுக்கு சொந்தமானது.
(1கொரிந்.1:2; கலாத்.1:13; 1தெச.2:14; 1தீமோத்.3:5,15)
பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டது. (யூதா 1:1)
சபைக்கும் கிறிஸ்துவுக்குமான உறவு என்ன?
சபை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்கும் சொந்தமானது. (மத்.16:16,18; ரோமர் 16:16)
இயேசுகிறிஸ்து தம்முடைய சுயரத்தத்தினால் சபையை சம்பாதித்தார். (அப்.20:28)
கிறிஸ்து சபையில் அன்புகூர்ந்து,
தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். (எபேசி.5:25-27)
சபை கிறிஸ்துவுக்குள் இருக்கிறது. (1கொரி.1:2; கலாத்.1:22; 1தெச.2:14; 2தெச.1:1)
"ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்கிற ஜீவனுள்ள கல்லாகிய தம்மேல் தமது சபையை இயேசுகிறிஸ்துவே கட்டுகிறார். (மத்.16:16,18; 1பேதுரு 2:4,5)
கிறிஸ்து சபைக்கு தலையாக இருக்கிறார். (எபேசி.1:23; 5:23; கொலோ.1:18,24)
சபை கிறிஸ்துவின் மணவாட்டியாகிய அவருடைய சரீரமாய் இருக்கிறது. (எபேசி.4:12; 5:23; 2கொரி.11:2; வெளிப்.19:7-9; 21:9,10)
சபைக்கும் ஆவியானவருக்குமான உறவு என்ன?
தேவஜனங்ளாகிய சபை ஆவியானவர் வாசம்பண்ணும் மாளிகையாய் அல்லது ஆலயமாய் இருக்கிறார்கள்.
(1பேதுரு 2:4,5; யோவான் 14:17; 1கொரி.3:16,17; 6:19)
ஆவியானவரே சபையின் வழிகாட்டி. (யோவான் 14:26; 16:7-11,13-15; ரோமர் 8:1,14; வெளி.2:7)
சபையின் தேற்றரவாளன். (யோவான் 14:16; அப்.9:31; 2கொரி.1:4-7)
சபையை பலப்படுத்துகிறவர். (அப்.1:8; 4:5-13,31; 7:54-56; 13:50-52; 1கொரி.2:5; எபேசி.3:16; 6:16; 2தீமோத்.1:14)
சபைக்கு தமது வரங்களை அளிக்கிறவர். (அப்.2:4; 1கொரி.12:1,7-11; ரோமர் 12:6-8)
சபையின் சுவிசேஷ ஊழிய நடத்துனர். (அப்.1:4,5,8; 2:1-4,11,14-41; 4:8-12; 8:29,39,40; 10:19,20; 13:2-4, 20:23; ரோமர் 15:18-21)
சபையை கிறிஸ்துவின் உள்ளான மற்றும் புறம்பான மகிமையின் சாயலுக்கு மறுரூபப்படுத்துகிறவர். (2கொரி.3:18; ரோமர் 8:11; 1கொரி.15:40-52)
குறிப்பு:
ஒரு மெய்யான சபை, பிதா குமாரன் பரிசுத்தஆவியாகிய திரியேக தேவனுடைய ஐக்கியத்தில் இருக்கவேண்டியது அவசியம்!! (2கொரி.13:14)
க. காட்சன் வின்சென்ட்.
(கோயம்பத்தூர்)
8946050920
======================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 9)
=======================
எக்லீசியாவாகிய சபை உலகத்திலிருந்து எதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்?
1️⃣ ஆச்சரியமான ஔியினிடத்திற்கு! (இயேசுகிறிஸ்துவினிடத்திற்கு
(1 பேதுரு 2:9)
புத்தியில் அந்தகாரப்பட்டிருந்தோம். (எபேசி.4:17-19)
முற்காலத்திலே அந்தகாரமாயிருந்தோம். (எபேசி.5:8)
இருளில் நடந்தோம். (ஏசாயா 9:2; யோவான் 12:35)
மரண இருளின் தேசத்தில் குடியிருந்தோம். (ஏசாயா 9:2)
இருளின் அதிகாரத்தினின்று தேவனால் விடுதலையாக்கப்பட்டோம்! (கொலோ.1:12,13)
பெரிய வெளிச்சத்தைக் கண்டோம்! (ஏசாயா 9:2; மத்.4:13-16)
ஔியினிடத்திற்கு திருப்பப்பட்டோம்! (அப்.26:18)
வெளிச்சத்தின் பிள்ளைகளானோம்! (1தெச.5:5)
கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறோம்! (எபேசி.5:8)
2️⃣ கலியாண விருந்துக்கு! (கிறிஸ்துவுடன் நித்திய ஐக்கியத்திற்கு)
வழிசந்தியில் காணப்பட்டோம். [இராஜா வீட்டு கலியாணத்திற்கு (பரம அழைப்புக்கு) தகுதியற்றவர்களாய் இருந்தோம்] (மத்.28:9,10; லூக்கா 14:21-23)
தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணும் பாக்கியத்தை பெற்றோம். (லூக்கா 14:15; வெளிப்.19:9)
ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்திற்கு அவருடைய மனைவியாய் (சபையாய்) ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம். (வெளிப்.19:7,8; மத்.25:1,2,4,7,10)
3️⃣ நீதிமான்களாக்கப்படுவதற்கு!
கிறிஸ்துவை விசுவாசித்ததினாலே அவரால் பாவத்திலிருந்து விடுதலையாகி நீதிமான்களானோம். (அப். 13:37-39; ரோமர் 4:5-8)
இலவசமாய் தேவனுடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்பட்டோம். (ரோமர் 3:23-28)
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே
(அவருடைய இரத்தத்தினாலே) நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். (ரோமர் 5:8,9)
நமது பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிக்க நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். (மத்.13:43)
நித்திய ஜீவனை அடைய நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். (மத்.25:34-40,46)
மெய்யான சபைகள் கிறிஸ்துவுக்குள் வெளிச்சமயாய் இருப்பதிலும் (நீதியாய் வாழ்வதிலும்), பரலோகத்திற்கு ஆயத்தமாகிறதிலும் கவனம் செலுத்துகிறதைக் காணலாம்!!
க. காட்சன் வின்சென்ட்
(கோயம்பத்தூர்)
8946050920
======================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 10)
========================
எக்லீசியாவாகிய சபை உலகத்திலிருந்து எதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்?
4️⃣ பரிசுத்தவான்களாகும்படிக்கு!
(1கொரி.1:2; 1தெச.4:7)
கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பரிசுத்தவான்களாக. (எபேசி.4:11-15)
பரிசுத்தவான்களுக்கேற்றபடி நடந்துகொள்ள. (எபேசி.5:3-8)
பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்க. (1தெச.3:12,13)
முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குள்ள பரிசுத்தவான்களாயிருக்க. (வெளிப்.20:4-6)
உலகத்தை நியாயந்தீர்க்கப்போகும் பரிசுத்தவான்களாயிருக்க. (1கொரி.6:2; மத்.19:28; லூக்கா 22:30; வெளிப்.20:4)
5️⃣ பந்தயப் பொருளுக்கு
(பிலிப்.3:14)
பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர.
(பிலிப்.3:12-15)
பந்தயத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓட. (1கொரி.9:24)
அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருக்க. (1கொரி.9:25)
நிச்சயமுள்ளவர்களாக ஓட. (1கொரி.9:26)
பந்தயப்பொருளை இழந்துபோகாதபடிக்கு ஜாக்கிரதையாய் இருக்க. (கொலோ.2:18-21)
3️⃣ சுவிசேஷத்தினாலே இரட்சிப்புக்கு!
(2தெச.2:13,14)
ஆத்தம இரட்சிப்பை அறிவிக்கும் சுவிசேஷம். (1பேதுரு 1:8-12)
ஜீவனையும் அழியாமையையும் வெளியரங்கமாக்கின சுவிசேஷம். (2தீமோத்.1:9-11)
நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் மட்டுமே விசுவாசிக்கும் சுவிசேஷம். (அப்.13:47-49)
விசுவாசிக்கிறவருக்கு இரட்சிப்பு உண்டாக்கும் சுவிசேஷம். (ரோமர் 1:16,17)
விசுவாசிகளாக்கும் இரட்சிப்பின் சுவிசேஷம். (எபேசி.1:13)
இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு தேவபெலனாயிருக்கும் சிலுவையைப்பற்றிய உபதேசம். (1கொரி.1:18,23,24)
தேவகிருபையை அறிந்துகொண்ட நாள்முதல் பலன்தரும் சுவிசேஷம். (கொலோ.1:4-7)
குறிப்பு:
தேவனுடைய மெய்யான சபையானது ஆத்தும இரட்சிப்பு, பரிசுத்த ஜீவியம், பரலோகப்பயணம் இவைகளில் அதிக கவனம் செலுத்துகிறதைக் காணமுடியும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
===============
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 11)
===============
எக்லீசியாவாகிய சபை உலகத்திலிருந்து எதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்?
7️⃣ நித்திய ஜீவனை பற்றிக்கொள்ள!
(1தீமோத்.6:12)
இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து. (யோவான் 3:15,16,36; 5:24; 6:47; 20:31; அப்.13:47,48)
தேவனுக்கு அடிமைகளாகி. (ரோமர் 6:22)
இடறலற்றவர்களாய் இருந்து. (மத்.18:1-9)
பூமியின் ஆஸ்தியிலும் பரலோக பொக்கிஷத்தை விரும்பி. (மத்.19:16-24)
எல்லாவற்றையும் விட்டு இயேசுவை பின்பற்றி. (மத்.19:27-29; மாற்கு 10:28-30)
நற்கிரியை செய்து. (மத்.25:32-40,46; ரோமர் 2:7; 1தீமோத்.6:17-19)
ஆத்தும அறுவடை பணிசெய்து. (யோவான் 4:34-36; 6:27)
ஆவிக்கென்று விதைத்து. (ஊழியர், ஏழை விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகளுக்கு கொடுத்து) (கலாத்.6:6-10)
விசுவாசத்தில் நல்லப் போராட்டத்தைப் போராடி. (1தீமோத்.6:6-12; 2தீமோத்.4:7,8)
இயேசுகிறிஸ்துவின் இரக்கத்தைப் பெறக் காத்திருந்து. (யூதா 1:20,21)
8️⃣ கிறிஸ்துவின் பாடுகளின் மாதிரியை பின்பற்ற!
(1பேதுரு 2:21)
நீதியினிமித்தம் பாடுபட. (1பேதுரு 3:14-17)
கிறிஸ்தவனாயிருப்பதால் பாடுபட. (1பேதுரு 4:12-16)
நமக்காய்
பாடுபட்ட இயேசுகிறிஸ்து! (ஏசாயா 53:1-10; மத்.16:21; எபிரே.2:18; 5:8; 13:12; 1பேதுரு 3:18; 4:1)
நாம் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி நமக்கு மாதிரியைப் பின்வைத்துப்போன கிறிஸ்து. (1பேதுரு 2:21-23)
நாம் பாடுபட தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம். (அப்.9:16; 1கொரி.4:12; எபிரே.13:12,13; 1பேதுரு 4:1,2)
நாம் பாடுபட அருளப்பட்டிருக்கிறோம். (பிலிப்.1:29; 2கொரி.1:6,7; 1தெச.2:14)
9️⃣ நித்திய சுதந்தரத்திற்கு!
(எபிரே.9:15)
நிழலான சுதந்தரம். (ஆதி.17:8; யாத்.6:8; லேவி.20;24; உபா.4:22)
நிலையான சுதந்தரம். (எபிரே.9:15; 10:10:34; 11:10; 13:14; 2கொரி.5:1)
பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கு. (அப்.20:32; 26:18)
கிறிஸ்துவினுடையவர்களுக்கு. (கலாத்.3:27-29)
கிறிஸ்துவுக்குள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு. (எபேசி.1:12)
கிறிஸ்துவை சேவிக்கிறவர்களுக்கு. (கொலோ.1:23,24)
பரிசுத்தஆவியால் முத்திரைப்போடப்பட்டவர்களுக்கு. (எபேசி.1:13,14)
பிதாவினால் தகுதியுள்ளவர்களாக்கப்பட்டவர்களுக்கு. (கொலோ.1:12-14)
குறிப்பு:
தேவனுடைய மெய்யான சபைகள் நித்திய ஜீவனிலும், கிறிஸ்துவினிமித்தம் பாடுபடுகிறதிலும் ஆர்வமாய் இருக்கிறதைக் காணமுடியும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
=======================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 12)
======================
இரட்சிக்கப்பட்டவர்களாகிய சபையை குறித்து ஒரு பார்வை!
விசுவாசமுள்ளவர்களாகி ஞானஸ்நானம் பெற்றோர்! (மாற்கு 16:16)*
விசுவாசித்து, மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றவர்கள். (அப்.2:38,41; 8:12,13,36-38; 9:18; 16:15,31-33; 18:8)
சீஷராகி ஞானஸ்நானம் பெற்றவர்கள். (மத்.28:19,20)
கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்றவர்கள். (கலாத்.3:27,28; ரோமர் 6:3,4; கொலோ.2:12; 1பேதுரு 3:21)
ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறந்தவர்கள். (யோவான் 3:3,5; அப்.1:4; 2:4,41; 4:31; 8:12-17; 9:17,18; 10:44,45; 19:5-7)
*பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைப் பெற்றோர்! (எபேசி.1:7)*
இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள். (அப்.10:43-48; 26:17,18)
மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றவர்கள். (அப்.2:38,41)
இயேசுகிறிஸ்துவுக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பை பெற்றவர்கள். (கொலோ.1:14; 1யோவான் 1:8,9)
*கர்த்தரால் ஒன்றுசேர்க்கப்பட்டோர்! (அப்.2:47)*
எருசலேமில் திரளான புருஷர்களும் ஸ்திரிகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். (அப்.5:14; 4:4; 2:41)
சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று. (அப்.6:7)
யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளில் சபைகள் பெருகிற்று. (அப்.9:31)
லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். (அப்.9:32-35)
யோப்பாவில் அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். (அப்.9:36-42)
செசரியாவில் கொர்நேலியுவின் குடும்பத்தார், நண்பர், உறவினர் கர்த்தரை விசுவாசித்தார்கள். (அப்.10:24,44-48)
அந்தியோகியாவில் அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். (அப்.11:19-21)
பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவில் யூதரிலும் யூதமார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். (அப்.13:14,42,43)
பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவில் புறஜாதியாரில்
நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் விசுவாசித்தார்கள். (அப்.13:14,45-48)
தெர்பையில் பவுலும் பர்னபாவும் அநேகரைச் சீஷராக்கினார்கள். (அப்.14:20,21)
தெசேலோனிக்கேயில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில் திரளான ஜனங்களும், கனம் பொருந்திய ஸ்திரீகளில் அநேகரும் விசுவாசித்து, பவுலையும் சீலாவையும் சேர்ந்துகொண்டார்கள். (அப்.17:1-4)
பெரோயாவில் யூதரில்
அநேகம்பேரும் கனம்பொருந்திய கிரேக்கரில் அநேக ஸ்திரீகளும் புருஷர்களும் விசுவாசித்தார்கள். (அப்.17:10-12)
அத்தேனே பட்டணத்தில் சிலர் பவுலைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். (அப்.17:21,34)
கொரிந்துவில் ஜெபஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு தன் வீட்டார் அனைவைரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள். (அப்.18:1-8)
எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கரில் விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள். (அப். 19:11-19)
குறிப்பு:
தேவனுடைய மெய்யான சபையில்
மனந்திரும்பி, முழுகி ஞானஸ்நானம் பெற்று, பரிசுத்த ஆவியைப் பெற்று, தேவனால் சேர்க்கப்பட்டவர்களாகிய இரட்சிக்கப்பட்டவர்களே அங்கமாய் இருக்கிறார்கள்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
=======================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 13)
=======================
இரட்சிக்கப்பட்டவர்களாகிய சபையை குறித்து ஒரு பார்வை!
*தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்!* (2தெச.2:13,14)
உலகத்தோற்றத்திற்கு முன்னே.... (எபேசி.1:4)
கிறிஸ்துவுக்குள் சுதந்தரமாக.... (எபேசி.1:12)
இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள.... (2தீமோத்.2:10)
ராஜ்யத்தை சுதந்தரிக்க.... (யாக்.2:5)
ஆட்டுக்குட்டியானவரோடு இருக்க.... (வெளிப்.17:14)
*கிறிஸ்துவின் வருகைக்கு காத்திருக்கிறவர்கள்!* (எபிரே.9:28)
நீதி கிடைக்குமென்று ஆவியைக்கொண்டு.... (கலாத்.5:5)
புத்திரசுவிகாரம் வருகிறதற்கு.... (ரோமர் 6:23-25)
அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு.... (எபிரே.11:9,10,13-16)
வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைப் பெறுவதற்கு....(எபிரே.6:11-19)
தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு....(2பேதுரு 3:12-14, 8-10)
எப்பொழுது எஜமான் வருவார் என்று....(லூக்கா 12:35-40)
கிறிஸ்து வெளிப்படுகிறதற்கு.... (1கொரி.1:7)
*முடிவுபரியந்தம் நிலைத்திருக்கிறவர்கள்!* (மத்.10:20,21)
கிறிஸ்துவில் நிலைத்திருக்கிறவர்கள். (யோவான் 6:56; 15:4,5)
கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்கிறவர்கள். (யோவான் 15:9)
கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவர்கள். (யோவான் 8:31; 2யோவான் 1:9)
சோதனையில் கிறிஸ்துவுடன் நிலைத்திருக்கிறவர்கள். (லூக்கா 22:28-30)
உபத்திரவத்தில் கர்த்தருக்குள் நிலைத்திருக்கிறவர்கள். (1தெச.3:2,8,34; மத்.10:16-19,22-39)
விசுவாசத்தில் நிலைத்திருக்கிறவர்கள். (அப்.14:22; 1கொரி.16:13; 2பேதுரு 1:3-11)
*குறிப்பு:*
தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய தேவனுடைய மெய்யான சபை: கிறிஸ்துவின் வருகைக்கு ஆவலாய் காத்திருப்பதோடு, சோதனைகள் மற்றும் உபத்திரவங்களில் முடிவுபரியந்தம் அவருக்குள் நிலைத்திருப்பதையும் காணலாம்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 14)
===================
தேவன் தமது சுயரத்தத்தினால் சம்பாதித்த சபை - ஒரு பார்வை!
*தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்!* (1தீமோத்.3:16)
தேவனிடத்தில், தேவனோடு, வார்த்தையாக இருந்த தேவன் மாம்சமானார்! (யோவான் 1:1,2,14)
தேவனுடைய ரூபமாய் தேவனுக்கு சமமாக இருந்தவர் மனுஷரூபமானார்! (பிலிப்.2:6-8)
பிள்ளைகளைப்போல (நம்மைப்போல) மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்! (எபிரே.2:14)
குமாரனாக வந்து தேவனை வெளிப்படுத்தினார்! (யோவான் 1:18; 14:7-11)
அவர் தேவனுடைய தற்சுரூபமானவர்! (கொலோ.1:15)
அவர் தேவனுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமாயிருந்தார்! (எபிரே.1:3)
தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது! (கொலோ.2:9)
*சபைக்காய் தமது சுயரத்தத்தை தந்தார்!* (அப்.20:28)
புதிய உடன்படிக்கையின் இரத்தமாக. (மத்.26:26-28)
இயேசுவின் இரத்தத்தினாலான புதிய உடன்படிக்கை! (1கொரி.11:25)
[பழைய உடன்படிக்கை - (எபிரே.8:7,9,13; யாத்.19:3-24:8; 34:10-28)
புதிய உடன்படிக்கை - (எபிரே.8:10-12; எரே.31:31-34; எபிரே.10:10:15-17)]
புது உடன்படிக்கையின் மத்தியஸ்தரான இயேசுகிறிஸ்து! (எபிரே.9:15; 12:24; ஏசாயா 42:7; 49:9)
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரானார்! (எபிரே.13:20)
[நித்திய உடன்படிக்கை - ஏசாயா 55:1-4; 61:1-3,8; எரே.50:4,5; எசேக்.16:60; 37:21-28)]
*நம்முடைய பாவங்களற நம்மை கழுவும் இரத்தம் தந்தார்!* (வெளிப்.1:6)
நமக்கு பாவமன்னிப்பை உண்டாக்கின இரத்தத்தம். (எபேசி.1:7; கொலோ.1:14)
நமது பாவத்தை நிவர்த்தியாக்கின இரத்தம். (எபிரே.10:4-10)
சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் இரத்தம். (1யோவான் 1:7,8; எபிரே.9:14-23,28)
*வீணான நடத்தையினின்று நம்மை மீட்கும் இரத்தம் தந்தார்!* (1பேதுரு 1:18,19)
ஆத்துமாவுக்காக கர்த்தருக்கு கொடுக்கப்படவேண்டிய மீட்கும் பொருள். (யாத்.30:11-16)
தேவனுக்கென்று நம்மை மீட்ட இயேசுவின் இரத்தம். (வெளிப்.5:9,10)
இயேசுவின் இரத்தத்தினால் நமக்கு உண்டான பாவமன்னிப்பாகிய மீட்பு. (எபேசி.1:7; கொலோ.1:14)
*நம்மை பரிசுத்தஞ்செய்யும் இரத்தம் தந்தார்!* (எபிரே.13:11,12)
பாளையத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும் மிருகத்தின் உடல். (எபிரே.13:11; லேவி.4:1-21; 8:13-17; 9:1-11; 16:27)
நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்ட இயேசுகிறிஸ்து. (எபிரே.13:12; மத்.27:31-33; மாற்கு 15:20,22; லூக்கா 23:32,33; யோவான் 19:16,17)
நமது மனச்சாட்சியை செத்த கிரியைகளற சுத்திகரிக்க. (எபிரே.9:14; 1யோவான் 1:7-9)
இலவசமாய் கிருபையினாலே நம்மை நீதிமான்களாக்க. (ரோமர் 3:23-26; 5:9)
பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்க நமக்கு தைரியம் உண்டாக. (எபிரே.10:19-22)
தேவனுக்கு முன்பாக நம்மை பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் நிறுத்த. (கொலோ.1:19-21)
*குறிப்பு:*
தேவனுடைய மெய்யான சபை பாவங்களறக் கழுவப்பட்டவர்களாய், வீணான நடத்தையினின்று விலகி, பரிசுத்தமாய் வாழ்கிறதைக் காணலாம்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
=======================
வேதாகம சபை! (The Biblical Church) (பகுதி - 15)
=======================
தேவன் தமது சுயரத்தத்தினால் சம்பாதித்த சபை - ஒரு பார்வை!
தொடர்ச்சி....
*நம்மை தமக்கு சொந்தமாக்கும் இரத்தம் தந்தார்!* (அப்.20:28)
தேவனுக்கென்று நம்மை மீட்கும் இரத்தம். (வெளிப்.5:9,10)
சத்துருக்களாயிருந்த நம்மை தேவனோடு ஒப்புரவாக்கும் இரத்தம். (எபேசி.2:14-18; கொலோ.1:20,21)
தேவனற்றவர்களாயிருந்த நம்மை தேவனுடைய வீட்டாராக்கின இரத்தம். (எபேசி.2:12,13,19).
*நித்திய ஜீவனை உண்டுபண்ணும் இரத்தம்!*
கோபாக்கினைக்கு நீங்கலாக்கும் இரத்தம். (ரோமர் 5:9,10)
மரணபயத்திலிருந்து விடுதலையாக்கும் இரத்தம். (எபிரே.2:14,15)
ஜீவமார்க்கத்தின் வழியாய் பிரவேசிக்க தைரியம் தரும் இரத்தம். (எபிரே.10:19,20)
கண்டிக்கப்படாதவர்களாக நிறுத்தும் இரத்தம். (கொலோ.1:20,21)
அதிக நன்மையானவைகளைப் பேசும் இரத்தம். (எபிரே.12:24)
குறிப்பு;
தேவனுடைய சுயரத்தத்தினால் சம்பாதிக்கப்பட்ட அவருக்கு சொந்தமானவர்களாகிய மெய்யான சபை, தேவன் தங்களை அழைத்த நித்திய ஜீவனைக்குறித்த வைராக்கிய வாஞ்சையுள்ளவர்களாய் இருப்பார்கள்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
Thanks for using my website. Post your comments on this