==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 26)
==================
சபை கிறிஸ்துவின் மணவாட்டி - ஒரு பார்வை!
தன் ஆடைகளை மறவாத மணவாட்டி!
C] நீதியின் சால்வையை மறவாதவள்!
ஏசாயா 61:10
கிறிஸ்துவின் மணவாட்டியாகிய அசல் சபையின் அங்கத்தினர் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கிறார்கள்.
1 பேதுரு 2:24
இயேசுகிறிஸ்து நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தாங்களும் நீதியுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
1 யோவான் 3:7
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
மத்தேயு 5:6
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுகிறார்கள்.
மத்தேயு 6:33
தங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள்.
ரோமர் 6:13
பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி தங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறார்கள்.
ரோமர் 6:19
நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறார்கள்.
2 கொரிந்தியர் 6:7
நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாய் இருக்கிறார்கள்.
எபேசியர் 6:14
நீதியுள்ளவைகளெவைகளோ, அவைகளையே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிலிப்பியர் 4:8
ஐசுவரியவான்களாகவேண்டும் என்கிற விருப்பம், பண ஆசை இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடுகிறார்கள்.
1 தீமோத்தேயு 6:9-11
பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடுகிறார்கள்.
2 தீமோத்தேயு 2:22
நீதியினிமித்தம் துன்பப்படுகிறார்கள்.
மத்தேயு 5:10
நீதியுள்ள இவர்கள் இன்னும் நீதிசெய்கிறார்கள்.
வெளிப்படுத்தல் 22:11
D] தன் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாதவள்!
வெளிப்படுத்தல் 3:4
"ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு, அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்" என்று ஆண்டவர் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது
வெளிப்படுத்தல் 3:4
மணவாட்டி சபைக்கு உட்பட்டவர்கள் தங்கள் ஜீவியத்தை எதனாலும் அசுசிப்படுத்திக்கொள்ளமாட்டார்கள்.
விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கு இவர்கள் விலகியிருக்கிறார்கள்.
அப்போஸ்தலர் 15:20
1 கொரிந்தியர் 10:14-28
விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளை உண்டுபண்ணுகிற தங்கள் அவயவங்களை அழித்துப்போடுகிறார்கள்.
கொலோசெயர் 3:5
மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, தங்களைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்துக்கிறார்கள்.
2 கொரிந்தியர் 7:1
2 கொரிந்தியர் 6:14-18
பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், .... இவைகளின் பேர்முதலாய் இவர்களுக்குள்ளே சொல்லப்படுவதில்லை.
எபேசியர் 5:3
விவாகம் இவர்களுக்கு கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருக்கிறது.
எபிரெயர் 13:4
மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுகிறார்கள் (பாவத்திற்கு எதிர்த்துநிற்கிறார்கள்).
யூதா 1:23
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 27)
==================
சபை கிறிஸ்துவின் மணவாட்டி - ஒரு பார்வை!
தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டி!
யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன், அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
வெளிப்படுத்தல் 21:2
புதிய எருசலேம் தேவனுடைய ஊழியர் மற்றும் தேவனுடைய ஜனங்களை அங்கமாகக் கொண்ட சபைக்கு ஒப்புமையாக இருக்கிறது.
வெளிப்படுத்தல் 21:13,14
வெளிப்படுத்தல் 19:6-10
தேவனுடைய சபையாகிய கிறிஸ்துவின் மணவாட்டி, தன் மணவாளனாகிய கிறிஸ்துவுக்காய் அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள்!
A] இரட்சிப்பினால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள்!
தேவன் தமது ஜனங்களை இரட்சிப்பினால் அலங்கரிக்கிறார்.
சங்கீதம் 149:3,4
இரட்சிக்கப்படுகிறவர்களையே கர்த்தர் அநுதினமும் அசல் சபையில் சேர்த்துக்கொண்டு வருகிறார்.
அப்போஸ்தலர் 2:47
தேவனுடைய அசல் சபையாகிய அவருடைய ஜனங்கள் இயேசு கிறிஸ்துவினால் தங்கள் பாவங்கள் நீக்கப்பட்டு இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மத்தேயு 1:21
வாசலாகிய, இயேசுவின் வழியாய் உட்பிரவேசித்து, இரட்சிக்கப்படு, உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைகிறார்கள் (பரிபூரண வாழ்வடைகிறார்கள்).
யோவான் 10:9
தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், தேவனுடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்ட சபையாகிய தேவஜனங்கள், ஒப்புரவாக்கப்பட்டபின் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது (நித்திய இரட்சிப்பை அடைவது) அதிக நிச்சயம்!
ரோமர் 5:10
B] பரிசுத்தத்தினால் அலங்கரித்துக்கொள்கிறாள்!
தேவனுடைய அசல் சபையாகிய அவருடைய ஜனங்கள் பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறார்கள்
சங்கீதம் 96:9
இவர்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிறார்கள்.
1 கொரிந்தியர் 1:2
இவர்கள் பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டு, இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டிருக்கிறார்கள்.
யூதா 1:1
இவர்கள் தேவனால் இயேசுகிறிஸ்துவையே ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமாய்க் கொண்டவர்கள்.
1 கொரிந்தியர் 1:31
இவர்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறவர்கள்.
2 தெசலோனிக்கேயர் 2:13
C] நற்கிரியைகளினால் அலங்கரித்துக்கொள்கிறாள்!
"ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்" என்கிறார் பேதுரு.
1 தீமோத்தேயு 2:10
தேவனுடைய அசல் சபைக்கு உட்பட்டிருக்கிற ஸ்திரீகள் தங்களை நற்கிரியைகளால் அலங்கரித்துக்கொள்கிறார்கள். நற்கிரியை செய்வது தேவனுடைய சபையில் இருக்கும் ஸ்திரீகள் மற்றும் புருஷர் இருவருக்கும் பொதுவான கடமை என்பதையும் நாம் அறியவேண்டும்.
ஏனெனில், தேவனுடைய ஜனங்களாகிய அவருடைய சபை, நற்கிரியைகளைச் செய்கிறதற்கு கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறார்கள். அவைகளில் அவர்கள் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
எபேசியர் 2:10
தமது சபையாரில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவார்.
பிலிப்பியர் 1:5
கிறிஸ்து தமது அசல் சபைக்குட்பட்டவர்களை சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்தஜனங்களாகவும், நற்கிரியைகளைச்செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் சுத்திகரிக்கும்படி, அவர்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.
தீத்து 2:14
இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை சபையாரில் நடப்பித்து, சபை தம்முடைய சித்தத்தின்படிசெய்ய தேவன் சபையைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குகிறார்
எபிரெயர் 13:21
தமது சபையார் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் அவர்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
2 கொரிந்தியர் 9:8
தேவன் தமது சபையாரின் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் அவர்களை ஸ்திரப்படுத்துகிறார்.
2 தெசலோனிக்கேயர் 2:17
தேவனுடைய அசல் சபையினர் சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கிறார்கள்.
தீத்து 3:1
தேவனிடத்தில் விசுவாசமான இவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கிறார்கள்.
தீத்து 3:8
சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளுகிறார்கள்.
கொலோசெயர் 1:10
கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகுகிறார்கள்.
தீத்து 3:14
மனுஷர் தங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற தங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, தங்கள் வெளிச்சம் (இயேசுகிறிஸ்துவின் குணங்கள்) அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கும்படி செய்கின்றனர்
மத்தேயு 5:16,3-10
அசல் சபையின் ஊழியர் எல்லாவற்றிலும் தன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பிக்கிறார்.
தீத்து 2:7
அசல் சபையின் அங்கத்தினர் அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஒருவரையொருவர் ஏவுகின்றனர்.
எபிரெயர் 10:24
சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடி நித்தியஜீவனை பெறுகிறார்கள்.
ரோமர் 2:7
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
=================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 28)
=================
சபை கிறிஸ்துவின் மணவாட்டி - ஒரு பார்வை!
தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டி!
D] சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியால் அலங்கரிக்கிறாள்!
"மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், *அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே* உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது" என்று இரட்சிக்கப்பட்ட ஸ்திரிகளுக்கு பேதுரு ஆலோசனை கொடுக்கிறார்.
1 பேதுரு 3:4
தேவனுடைய அசல் சபையின் அங்கமாகிய ஸ்திரீகள் அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணத்தினால் தங்களை அலங்கரித்துக்கொள்ளுகிறார்கள்.
தேவனுடைய அசல் சபையின் புருஷர் மற்றும் ஸ்திரீகள் ஆகிய இருசாராரும் சாத்தகுணமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுடைய மணவாளன் சாந்தமாய் இருக்கிறார்.
மத்தேயு 11:29
மத்தேயு 21:4
தேவனுடைய அசல் சபையினர் மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருக்கிறார்கள்.
எபேசியர் 4:2,3
இவர்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, தங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் தங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.
யாக்கோபு 1:21
இவர்களுடைய சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருக்கிறது.
பிலிப்பியர் 4:5
இவர்கள் ஒருவரையும் தூஷியாமலும், சண்டைபண்னாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கிறார்கள்.
தீத்து 3:2
எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருக்கிறார்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:14
ஞானிகளும் விவேகிகளுமாயிருக்கிற இவர்கள், ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தங்கள் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கிறார்கள்.
யாக்கோபு 3:13
தேவனுடைய அசல் சபையின் ஊழியர்கள், சண்டைபண்ணுகிறவர்களாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவர்களும், போதகசமர்த்தர்களும், தீமையைச் சகிக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்.
2 தீமோத்தேயு 2:24
இவர்கள் நீடிய சாந்தத்திலும் தங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறார்கள்.
2 கொரிந்தியர் 6:3,6
தேவனுடைய அசல் சபையின் ஊழியர்கள், சபையாருக்குள் சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான தேவனுடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் அவர்கள் பலப்படுத்தப்பட வேண்டுதல்செய்கிறா்கள். கொலோசெயர் 1:11
தங்களில் யாதொரு குற்றத்தில் அகப்பட்ட ஒருவரை, ஆவிக்குரியவர்களாகிய அசல் சபையார் சாந்தமுள்ள ஆவியோடு சீர்பொருந்தப்பண்ண ஆலோசனை கொடுக்கிறார்கள்.
கலாத்தியர் 6:1
யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்று திரிகிற விசுவாசிகளுக்கு, அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறார்கள்.
2 தெசலோனிக்கேயர் 3:11,12
தேவஜனங்கள் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, எல்லா மனுஷருக்காகவும், குறிப்பாக ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ண சபையாருக்கு
பிரதானமாய் புத்திசொல்லுகிறார்கள்.
1 தீமோத்தேயு 2:1,2
தேவனுடைய அசல் சபையின் மூத்த ஊழியர்கள், தங்கள் உடன் ஊழியருக்கு நீடிய சாந்தத்திலும் அன்பிலும் பொறுமையிலும் மாதிரியாய் இருக்கிறார்கள்.
2 தீமோத்தேயு 3:10
பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடுவதற்கு உடன் ஊழியருக்கு ஆலோசனை சொல்லுகிறார்கள்.
1 தீமோத்தேயு 6:11
சபையாரை எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்ல உடன் ஊழியருக்கு ஆலோசனை கொடுக்கிறார்கள்.
2 தீமோத்தேயு 4:2
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
=================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 29)
=================
சபை கிறிஸ்துவின் மணவாட்டி - ஒரு பார்வை!
*தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டி!*
E] கீழ்ப்படிதலால் அலங்கரித்துக்கொள்ளுகிறாள்!
"இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரிகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள். நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்" என்று பேதுரு சபையிலுள்ள ஸ்தீரீகளுக்கு ஆலோசனை சொல்லுகிறார்.
1 பேதுரு 3:5,6
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினர் கீழ்ப்படிதலுள்ள ஒரு சமூகமாய் இருக்கிறார்கள். ஏனெனில் இவர்களுடைய மணவாளன் மனுஷரூபத்தில் இருந்தபோது, தனது பெற்றோர் ஸ்தானத்தில் இருந்தவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்
லூக்கா 2:51
தேவனுடைய அசல் சபையின் அங்கதினர், மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு கீழ்ப்படிந்து, யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துகிறார்கள், எவனுக்கு வரியைச் செலுத்த வேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துகிறார்கள், எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுகிறார்கள், எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுகிறார்கள்.
ரோமர் 13:1-7
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினரான மனைவிகள், கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, தங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படிகிறார்கள்.
எபேசியர் 5:22
கர்த்தருக்கேற்கும்படி, தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
கொலோசெயர் 3:18
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினரான
பிள்ளைகள், தங்களைப் பெற்றாருக்கு (கர்த்தருக்குள்) எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிகிறார்கள். (கொலோ.3:20; எபே.6:1)
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினர், தங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருந்து, தங்களை நடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குகிறார்கள்.
எபிரெயர் 13:17
2 கொரிந்தியர் 2:8,9
தேவனுடைய அசல் சபையின் இளைஞர், மூப்பருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
1 பேதுரு 5:5
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினர் அனைவரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுகிறார்கள்.
1 பேதுரு 5:5
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
=================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 30)
=================
சபை கிறிஸ்துவின் மணவாட்டி - ஒரு பார்வை!
தன்னை ஆயத்தம்பண்ணின மணவாட்டி!
"ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்" என்று திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி, சொல்லப்படத்தக்கதாக தேவனுடைய அசல் சபையாகிய கிறிஸ்துவின் மணவாட்டி தன்னை நித்திய விவாகநாளுக்கு ஆயத்தம்பண்ணிவருகிறாள்.
வெளிப்படுத்தல் 19:7
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினர், தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோன புத்தியுள்ள கன்னிகைகளைப்போல, இயேசுகிறிஸ்துவை சந்திக்க எப்போதும் ஆயத்தமாய் இருக்கிறார்கள்.
மத்தேயு 25:4
ஆயத்தமாயிருக்கிற இவர்களே மணவாளன் .(இயேசுகிறிஸ்து) வரும்போது அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் (பரலோகத்தில்) பிரவேசிக்கவிருக்கிறார்கள்.
மத்தேயு 25:10
மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது இவர்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருக்கிறார்கள்
மத்தேயு 25:13
தாங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வரவிருக்கிறபடியால், திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று அறிந்திருக்கிற வீட்டெஜமான் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டாதிருக்கிறதுபோல தங்களும் ஆயத்தமாயிருக்கிறார்கள்
மத்தேயு 24:43,44
மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வரும் காலத்தை தாங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருந்து, விழித்திருந்து ஜெபம்பண்ணுகிறார்கள்.
மாற்கு 13:26-33
தங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், தங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,
தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
லூக்கா 12:36
மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காணும்படி, தங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், தாங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் தங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருக்கிறார்கள்.
லூக்கா 21:27,34
இனிச் சம்பவிக்கப்போகிறதாக ஆண்டவரால் சொல்லப்பட்டவைகளுக்கெல்லாம் தாங்கள் தப்பி, அவருக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருக்கிறார்கள்.
லூக்கா 21:36
தாங்கள் பாவஞ்செய்யாமல், நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருக்கிறார்கள்
1 கொரிந்தியர் 15:34
விழித்திருக்கிறார்கள், விசுவாசத்திலே நிலைத்திருக்கிறார்கள், புருஷராயிருக்கிறார்கள், திடன்கொள்ளுகிறார்கள்.
1 கொரிந்தியர்16:13
எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மன உறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எபேசியர் 6:18
இடைவிடாமல் ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருக்கிறார்கள்.
கொலோசெயர் 4:2
இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று தாங்கள் நன்றாய் அறிந்திருக்கிறபடியால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல தாங்கள் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கிறார்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:2,6
விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிற கிரியைகளை ஸ்திரப்படுத்துகிறார்கள்
வெளிப்படுத்தல் 3:2
இதோ, ஆண்டவர் திருடனைப்போல் வருகிறபடியால், தங்கள் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் (அநீதியாய்) நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தங்கள் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிற (விழித்திருக்கிற) பாக்கியவான்களாயிருக்கிறார்கள்.
வெளிப்படுத்தல் 16:15
பரிசுத்தவான்களுடைய நீதியுள்ள கிரியைகள் என்னப்படுகிற சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி இவர்களுக்கு அளிக்கப்படவிருக்கிறது
வெளிப்படுத்தல் 19:8
ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கிற இவர்கள் பாக்கியவான்கள்!
வெளிப்படுத்தல் 19:9
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
Thanks for using my website. Post your comments on this