==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 21)
==================
கிறிஸ்துவின் சரீரமாகிய சபை - ஒரு பார்வை!
தன் தன் அளவுக்குத்தக்கதாய் கிரியைசெய்யும் அவயவம்!
எபேசியர் 4:16
இயேசுகிறிஸ்து உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்திருக்கிறார். கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக சபையாரில் அவரவருக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.
எபேசியர் 4:7,8
ஆவியினுடைய அநுக்கிரகம் அவரவருடைய பிரயோஜனத்திற்கென்று (சபையின் பக்திவிருத்திக்கு பிரயோஜனப்படுத்துவதற்கென்று) அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவருக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவருக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவருக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவருக்கு அந்த ஆவியினாலே குணமாக்கும் வரங்களும், வேறொருவருக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவருக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவருக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவருக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவருக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
1 கொரிந்தியர் 12:7-10
ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்கள், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடவேண்டும்.
1 கொரிந்தியர் 14:12
தங்களுக்கு அருளப்பட்ட கிருபையின்படியே சபையார் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, தங்களில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவர் (நியாயப்பிரமாணத்துக்கேற்றதாக அல்ல) விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லவேண்டும். ஊழியஞ்செய்கிறவர் ஊழியத்திலும், போதிக்கிறவர் போதிக்கிறதிலும், புத்திசொல்லுகிறவர் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கவேண்டும், பகிர்ந்துகொடுக்கிறவர் வஞ்சனையில்லாமல் கொடுக்கவேண்டும், முதலாளியானவர் (நிர்வாகி) ஜாக்கிரதையாயிருக்கவேண்டும், இரக்கஞ்செய்கிறவர் உற்சாகத்துடனே செய்யவேண்டும்.
ரோமர் 12:6-8
அவரவர் பெற்ற வரத்தின்படியே தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யவேண்டும். ஒருவர் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கவேண்டும், ஒருவர் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யவேண்டும், எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்யவேண்டும்.
1 பேதுரு 4:10,11
தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் தங்களை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவும், அவருடைய திவ்விய வல்லமையினாலே தங்களுக்கு தந்தருளப்பட்டு, இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறவர்கள், அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் தங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,
ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,
தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்கவேண்டும்.
2 பேதுரு 1:3-8
அவராலே சரீரம் (சபை) முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் (அங்கத்தினரும்) தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை (ஆவிக்குரிய வளர்ச்சியை) உண்டாக்குகிறது.
எபேசியர் 4:16
குறிப்பு:
தேவனுடைய மெய்யான சபையின் அங்கத்தினர் தேவன் தங்களுக்கு அருளிய கிருபை வரங்களை ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாக்குவதற்கு ஏதுவாக பயன்படுத்துகிறதை காணமுடியும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 22)
==================
கிறிஸ்துவின் சரீரமாகிய சபை - ஒரு பார்வை!
சரீர வளர்ச்சிக்காய் கிரியயை செய்யும் அவயவங்கள்!
அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.
எபேசியர் 4:16
சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டுள்ள சரீரம்!
சரீரத்தின் (சபையின்) அவயவங்கள் (அங்கத்தினர்) ஒன்றோடொன்று (ஒருவரோடொருவர்) ஒரே நம்பிக்கை , ஒரே ஆவி, ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம், ஒரே தேவன், ஒரே பிதா (எபேசியர் 4:4-6) ஆகியகணுக்களினால் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டுள்ளன(ர்).
பக்திவிருத்திக்கு ஏதுவான சரீரவளர்ச்சிக்கு அடிப்படை அவயவங்களின் அன்பு!
அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.
1 கொரிந்தியர் 8:1
கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்.
கலாத்தியர் 5:6
அவயவங்கள் (விசுவாசிகள்) ஒன்றின்மேல் ஒன்று (ஒருவரிலொருவர்) அன்பாயிருந்து, ஒன்றுக்காக ஒன்று (ஒருவருக்காக ஒருவர்) கிரியை செய்கிறதினால், முழு சரீரத்தின் (சபையின்) வளர்ச்சி சாத்தியமாகிறது.
சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு, அதிக கனத்தைக் கொடுத்து, சரீரத்தை அமைத்திருக்கிறார். ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும். ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்.
1 கொரிந்தியர் 12:26
தேவனுடைய அசல் சபையில் சபையார் ஒருவரின் நலனில், வளர்ச்சியில் மற்றவர் உண்மையான அக்கறையுள்ளவராக இருக்கின்றனர்.
இங்கு அவரவர் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குகின்றனர்.
பிலிப்பியர் 2:4
ஏழை எளிய மக்களை கனப்படுத்துகிறதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணுகின்றனர். (பிலி.2:3)
ஒருவருடைய இன்பத் துன்பத்தில் மற்றவர் உண்மையாய் பங்கெடுக்கிறார்.
ரோமர் 12:15
ஒருவரின் ஆவிக்குரிய மற்றும் சரீரத் தேவைகளைக்குறித்து மற்றவர் அக்கறையுள்ளவராக இருக்கிறார்.
இருக்கிறவர்கள் இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து, அவர்களுடைய சரீரத்தேவைகளை சந்தித்து, பூமிக்குரியக் குறைவுகளை நிறைவாக்குகின்றனர்.
அப்போஸ்தலர் 2:44,45
அப்போஸ்தலர் 4:32,34,35
பக்தியில் விருத்தியே சபையின் மெய்யான வளர்ச்சி!
பக்திவிருத்தியே சபையின் மெய்யான வளர்ச்சி என்பதை தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினர் அனைவரும் அறிந்திருக்கின்றனர்.
ஆகையால், சபையார் ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்கிறார்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:11
சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடுகின்றனர்.
ரோமர் 14:19
ஒவ்வொருவரும் பிறருடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவருக்குப் பிரியமாய் நடக்கின்றனர்.
ரோமர் 15:2
கெட்ட வார்த்தை ஒன்றும் பேசாமல், பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தையையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுகின்றனர்.
எபேசியர் 4:29
ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்கள், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுகின்றனர்.
1 கொரிந்தியர் 14:12
குறிப்பு
தேவனுடைய அசல் சபையில் ஒருவர் மற்றவரின் ஆவிக்குரிய மற்றும் சரீர நன்மைகளுக்காய் மிகவும் பிரயாசப்படுகிறதைக் காணமுடியும்!!
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 23)
==================
கிறிஸ்துவின் சரீரமாகிய சபை - ஒரு பார்வை!
அன்புள்ள அவயவங்களைக் கொண்ட சரீரம்!
அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.
எபேசியர் 4:16
சரீரத்தின் (சபையின்) முழுமையான வளர்ச்சிக்கு தன்தன் அளவுக்குத்தக்கதாகக் கிரியை செய்யும் அவயவங்களே (சபையாரே) காரணம். ஒவ்வொரு அவயவமும் (அங்கத்தினரும்) தன்தன் அளவுக்குத்தக்கதாக (கிருபை வரங்களுக்குத்தக்கதாகக்) கிரியைசெய்வதற்கு ஒன்றிலொன்று (ஒருவரிலொருவர்) கொண்டுள்ள அன்பே அடிப்படையாக இருக்கிறது.
.... அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.
1 கொரிந்தியர் 8:1
கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்.
கலாத்தியர் 5:6
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினர் ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருக்கிறார்கள்
1 பேதுரு 4:8
கிறிஸ்து தங்களுக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து தங்களில் அன்புகூர்ந்ததுபோல, தாங்களும் அன்பிலே நடந்துகொள்ளுகிறார்கள்
எபேசியர் 5:2
யோவான் 13:34
யோவான் 15:12,17
மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருக்கிறார்கள்.
எபேசியர் 4:2,3
1 தெசலோனிக்கேய்ர 5:14,15
அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்கிறார்கள்.
கலாத்தியர் 5:13
ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணுவதோடு,
அவரவர் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குகிறார்கள்.
பிலிப்பியர் 2:2-4
தேவனுடைய அன்பிலே தங்களைக் காத்துக்கொண்டு, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சிக்கிறார்கள்.
யூதா 1:21,22
இவர்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறது.
2 தெசலோனிக்கேயர் 1:3
அன்பினால் பக்திவிருத்தியடையும் சரீரம் (சபை)!
சரீரத்தின் (சபையின்) அனைத்து அவயவங்களும் (அங்கத்தினரும்) அன்பினால் தன்தன் அளவுக்குத்தக்கதாக (கிருபை வரங்களுக்குத்தக்கதாகக்) கிரியைசெய்வதால் சரீரம் (சபை) வளர்ச்சியடைகிறது (பக்திவிருத்தியடைகிறது).
எபேசியர் 4:16
தேவனுடைய அசல் சபையின் அங்கத்தினர் ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்கிறார்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:11
சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்ககிறார்கள். (ரோமர் 14:19)
ஒவ்வொருவரும் பிறருடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி பிறருக்குப் பிரியமாய் நடக்கிறார்கள்.
ரோமர் 15:2
ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்கள் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுகிறார்கள்.
1 கொரிந்தியர் 14:12
பிறர் பக்திவிருத்தி அடையும் விதத்திலேயே சங்கீதம் பாடுகிறார்கள், போதகம்பண்ணுகிறார்கள், அந்நியபாஷையைப் பேசுகிறார்கள், இரகசியத்தை வெளிப்படுத்துகிறார்கள், வியாக்கியானம்பண்ணுகிறார்கள்.
1 கொரிந்தியர் 14:26,27
கெட்ட வார்த்தை ஒன்றும் பேசாமல், பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தைகளை மட்டுமே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுகிறார்கள்.
எபேசியர் 4:29
தேவனுடைய அசல் சபையின் அசல் அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர், மேய்ப்பர் மற்றும் போதகர் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவே தேவன் தங்களை அதற்கு ஊழியராக ஏற்படுத்தியிருக்கிறதை அறிந்திருக்கிறார்கள்.
எபேசியர் 4:12,13
சகலத்தையும் சபையாரின் பக்திவிருத்திக்காகச் செய்கிறார்கள்.
2 கொரிந்தியர் 12:19
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 24)
==================
சபை கிறிஸ்துவின் மணவாட்டி - ஒரு பார்வை!
ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டி!
வெளிப்படுத்தல் 19:7
வெளிப்படுத்தல் 21:9
அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஆட்டுக்குட்டியின் (கிறிஸ்துவின்) மணவாட்டி.
வெளிப்படுத்தல் 5:6
ஏசாயா 53:7
குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் மணவாட்டி.
1 பேதுரு 1:19
உலகத்தின் (தனது) பாவத்தை சுமந்துதீர்த்த தேவ ஆட்டுக்குட்டியின் .(இயேசுகிறிஸ்துவின்) மணவாட்டி.
யோவான் 1:29
கற்புள்ள கன்னிகையாகிய மணவாட்டி!
2 கொரிந்தியர் 11:2
ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள், கற்புள்ளவர்கள், ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள்.
வெளிப்படுத்தல் 14:4
தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்படிகிறவர்களுமான பாலிய ஸ்திரீகள். அப்படியே, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கிற பாலிய புருஷர்.
தீத்து 2:4-6
கற்பிலும் தேவஊழியராக விளங்கப்பண்ணுகிறவர்கள்.
2 கொரிந்தியர் 6:3,6,10
கற்பிலும் விசுவாசிகளுக்கு மாதிரியாய் இருக்கிற ஊழியர்.
1 தீமோத்தேயு 4:12
ஆகியோர் கற்புள்ள கன்னிகையாகிய மணவாட்டி சபையில் அடங்குவர். இவர்களே கிறிஸ்துவின் அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிற மணவாளி.
உன்னதப்பாட்டு 4:12
கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக கிறிஸ்து தமக்குமுன் நிறுத்திக்கொள்ளப்போகும் மணவாட்டி சபை இவர்களே.
எபேசியர் 5:27
கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு மணவாட்டி!
2 கொரிந்தியர் 11:2
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவர்கள்.
1 யோவான் 4:15
கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்று, அவரைத் தரித்துக்கொண்டவர்கள்.
கலாத்தியர் 3:27
எந்த இனத்தாராயினும், வர்க்கத்தினராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே (கிறிஸ்துவின்) ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாக தாகந்தீர்க்கப்பட்டவர்கள்.
1 கொரிந்தியர் 12:13
கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறவர்கள்.
எபேசியர் 5:30
கிறிஸ்து ஒருவரையே குருவாகக் கொண்டவர்கள்.
மத்தேயு 23:10
இவர்களே கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு மணவாட்டியாக இருக்கிறார்கள்.
கிறிஸ்து இவர்களுக்கு தலையாக இருக்கிறார்.
எபேசியர் 5:23,24,29
கிறிஸ்துவே இவர்களில் வாழ்கிறார்.
கலாத்தியர் 2:20
எந்த வித்தியாசமும் இல்லாமல், கிறிஸ்துவே இவர்கள் எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.
கொலோசெயர் 3:11
"என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள்" என்று சொல்லக்கூடிய மணவாட்டி இவர்களே!
உன்னதப்பாட்டு2:16
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
==================
வேதாகம சபை!
(The Biblical Church)
(பகுதி - 25)
==================
சபை கிறிஸ்துவின் மணவாட்டி - ஒரு பார்வை!
தன் ஆடைகளை மறவாத மணவாட்டி!
எரேமியா 2:32
A] அலங்கார வஸ்திரங்களை மறவாதவள்!
ஏசாயா 52:1
அலங்கார வஸ்திரம் பரிசுத்த ஜீவியத்தைக் குறிக்கிறது.
"இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்" என்று ஆண்டவர் சொல்லுகிறது கவனிக்கத்தக்கது.
வெளிப்படுத்தல் 16:15
தேவனுடைய அசல் சபையாகிய மணவாட்டி சபையினர், பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறார்கள்ள்.
சங்கீதம் 96:9
மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருக்கிறார்கள். விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் (தூய்மையாய்) இருக்கிறார்கள்.
சங்கீதம் 110:3
பரிசுத்தமுள்ளவர்களாயிருக்க நாடுகிறார்கள்.
எபிரெயர் 12:14
பரிசுத்தமான தேவாலயமாக இருக்கிறார்கள்.
1 கொரிந்தியர் 3:16,17
தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து, புத்தியுள்ள ஆராதனை செய்கிறார்கள்.
ரோமர் 12:1
மிகுந்த பரிசுத்த நடக்கையும் தேவபக்கியும் உள்ளவர்களாயிருக்கிறார்கள்.
2 பேதுரு 3:11
பரிசுத்தத்தில் நிலைகொண்டிருக்கிறார்கள்.
1 தீமோத்தேயு 2:15
மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, தங்களை சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்துகிறார்கள்.
2 கொரிந்தியர் 7:1
நீதியுள்ள இவர்கள் இன்னும் நீதிசெய்கிறார்கள், பரிசுத்தமுள்ள இவர்கள் இன்னும் பரிசுத்தமாகிறார்கள்.
வெளிப்படுத்தல் 22:11
கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக கிறிஸ்து இயேசுவுக்குமுன் நிற்க ஆயத்தமாகிறார்கள்.
எபேசியர் 5:26,27
B] இரட்சிப்பின் வஸ்திரத்தை மறவாதவள்!
ஏசாயா 61:10
தேவனுடைய அசல் சபையாகிய மணவாட்டி சபையின் அங்கத்தினர்,
முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே தங்களுக்கு உறுதியாக்கப்பட்டதும், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்தஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து கவலையுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
எபிரெயர் 2:3,4
அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் தங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுகிறார்கள்.
பிலிப்பியர் 2:12
தாங்கள் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது தங்களுக்கு அதிக சமீபமாயிருக்கிறது என்பதை
அறிந்தவர்களாய், அந்தகாரத்தின் கிரியைகளை தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு, களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய்நடக்கக்கிறார்கள்
ரோமர் 13:13
கிறிஸ்துவினிமித்தம் பாடுபடும்போது, தாங்கள் இரட்சிக்கப்படுகிறதற்காக மருளாதிருக்கிறார்கள்.
பிலிப்பியர் 1:29
சோதனைகாலத்தில் தாங்கள் இரட்சிக்கப்படுவதற்காய் முடிவுபரியந்தம் நிலைநிற்கிறார்கள்.
மத்தேயு 10:21,22
மத்தேயு 24:9-13
தங்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாகும் இயேசுகிறிஸ்துவுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
எபிரெயர் 9:28
க. காட்சன் வின்சென்ட்
(Biblical Teaching Ministry)
(கோயம்பத்தூர்)
8946050920
Thanks for using my website. Post your comments on this